14 Dec, 2025 Sunday, 02:41 AM
The New Indian Express Group
இந்தியா
Text

பயங்கரவாதத் தொடர்பு! முதியவர்களை குறிவைக்கும் சைபர் மோசடிகள்!

PremiumPremium

பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக, முதியவர்களை குறிவைத்து சைபர் மோசடிகள் நடப்பது பற்றி..

Rocket

சைபர் மோசடிகள்

Published On29 Nov 2025 , 7:56 AM
Updated On29 Nov 2025 , 7:56 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Vanisri

சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் போல நடித்து, பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதாக முதியவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடலாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், முதியவர்களை தொடர்பு கொண்ட சைபர் மோசடி கும்பல், தங்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் என்று கூறி, முதியவர்களின் வங்கிக் கணக்குகள் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பணம் பெற பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், சைபர் மோசடியாளர்களின் மிரட்டலால் அச்சமடைந்த முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக, அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது.

அதாவது, 68 வயதாக வழக்குரைஞர் ஒருவர், தான், ஏப்ரல் 22ஆம் தேதி புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பணம் திரட்டியதாக மிரட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்போதுதான், இந்த மோசடி பற்றி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தும் ஜஹாங்கிராபாத் காவல்துறையினர், மோசடியாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் போல பேசி, அவரது எச்டிஎஃப்சி வங்கிக் கணக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மிரட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது, முதியவர் வீட்டில் யாரும் இல்லை. அவர், தன்னை பயங்கரவாதியாக சந்தேகிப்பதாக நினைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். போபாலில் இதுபோன்ற சைபர் மோசடியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது மட்டுமல்லாமல், கடந்த 10 நாள்களில் கிட்டத்தட்ட ஐந்து முல் 7 முதியவர்கள், இதுபோன்று சைபர் மோசடியாளர்களால் குறி வைக்கப்பட்டுள்ளனர். உங்கள் வங்கிக் கணக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறி வங்கி விவரங்களைப் பெற்று, அதிலிருக்கும் பணத்தை பரிமாற்றம் செய்து ஏமாற்றுகிறார்கள்.

ஒருவர் மட்டுமே மோசடியாளர்களை அடையாளம் கண்டுகொண்டு தப்பியிருக்கிறார்கள். மற்றொரு ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.68 லட்சத்தை இழந்துள்ளார். மேலும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரும் ரூ.8 லட்சத்தை இழந்துள்ளார்.

முன்னதாக, காவல்துறை அதிகாரி என்று கூறி சைபர் கைது மோசடியில் ஈடுபட்டவர்கள், தற்போது பயங்கரவாத சதி திட்டம் தொடர்பான செய்திகள் அதிகம் வெளியாவதால், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் என்ற பெயரில் சைபர் மோசடியைத் தொடங்கியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பாவி மக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாவதால், அது குறித்து முதியவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, பணம்பறிக்க, சைபர் குற்றவாளிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுபோன்ற சைபர் குற்றவாளிகள் பல அடுக்குகளாகப் பணியாற்றுகிறார்கள். ஓய்வுபெற்ற முதியவர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் அவர்களை உளவு பார்த்து, குறிப்பிட்ட மோசடியில் அவர்களை சிக்க வைக்கிறார்கள். எனவே, முதியவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 criminals impersonating anti-terror investigators, placing victims under a so-called “digital arrest”, and extorting huge sums by falsely accusing them of involvement in terror funding.

இதையும் படிக்க.. கட்சித் தலைமை சொல்வதை பின்பற்றுவோம்: கூட்டாக அறிவித்த சித்தராமையா - சிவக்குமார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023