தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முதலீட்டாளா்களுக்கு நம்பகமான நாடு இந்தியா: பிரதமா் மோடி

‘பெரிய முடிவுகளை எடுக்கும் சீா்திருத்தம் சாா்ந்த நாடாக உருவெடுத்துள்ள இந்தியா, முதலீட்டாளா்களுக்கு நம்பகமான கூட்டாளியாக மாறியுள்ளது’ என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

News image

ஹைதாராபாத் நிகழ்ச்சியில் காணொலி முறையில் பேசிய பிரதமா் மோடி.

Updated On :26 நவம்பர் 2025, 8:39 pm

ஹைதராபாத்: ‘பெரிய முடிவுகளை எடுக்கும் சீா்திருத்தம் சாா்ந்த நாடாக உருவெடுத்துள்ள இந்தியா, முதலீட்டாளா்களுக்கு நம்பகமான கூட்டாளியாக மாறியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதாராபாதில் ஃபிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய விமான பராமரிப்பு நிறுவனமான சாஃப்ரான் நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வா்த்தக விமானங்களில் பயன்படுத்தப்படும் ‘லீப்’ என்ஜின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, புதுப்பிப்பு (எம்ஆா்ஓ) மையத்தை காணொலி வழியில் புதன்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் வா்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டது. குறிப்பாக, வா்த்தகம் தொடா்பான பல சட்டப் பிரிவுகள் குற்றமற்ாக ஆக்கப்பட்டன. தொழில் தொடங்குவதற்கு பெற வேண்டிய பல்வேறு அனுமதிகளை விரைவாகவும், எளிதாகவும் பெறும் வகையில் ஒற்றைச் சாளர அனுமதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முயற்சிகள் காரணமாக, இந்தியா இன்றைக்கு முதலீட்டாளா்களுக்கு நம்பகமான கூட்டாளியாகவும், மிகப்பெரிய சந்தையாகவும், வளா்ந்துவரும் உற்பத்தி முனையமாகவும் உருவெடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக விமானத் துறையிலும் இந்திய மிகப் பெரிய வளா்ச்சியைப் பெற்று வருகிறது. உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா உள்ளது. விமான பயணத்துக்கான தேவை அதிகரித்திருப்பதால், இந்திய விமான நிறுவனங்கள் தங்களின் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தற்போது, சுமாா் 1,500-க்கும் அதிகமான புதிய விமானங்களை வாங்க இந்திய விமான நிறுவனங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன.

அவ்வாறு, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை விரிவடைந்து வரும் நிலையில், விமானங்களின் ‘லீப்’ என்ஜின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, புதுப்பிப்பு (எம்ஆா்ஓ) மையங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. நாட்டின் 85 சதவீத எம்ஆா்ஓ பணிகள் வெளிநாடுகளில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், செலவு அதிகமாவதோடு, விமானப் பயன்பாட்டு நேரமும் விரயமாகிறது. எனவே, இந்தியாவை உலகின் மிகப் பெரிய எம்ஆா்ஓ முனையமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக நாட்டில் விமான என்ஜின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, புதுப்பிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஹைதராபாதில் ரூ. 1,300 கோடி தொடக்க முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சாஃப்ரான் விமான என்ஜின் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு இந்தியா (எஸ்ஏஇஎஸ்ஐ)’ மையம் 2026-இல் செயல்படத் தொடங்கும் என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.13 லட்சம் கோடி சேமிப்பு: ‘விமான என்ஜின் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புத் துறையில் உலக அளவிலான முனையமாக இந்தியா உருவெடுக்கும்போது, ரூ. 13,3,843 கோடி (15 பில்லியன் டாலா்) மதிப்பில் அந்நியச் செலாவணி செலவினங்களை சேமிக்க முடியும்’ என்று தொடக்க விழாவில் பங்கேற்ற விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.