14 Dec, 2025 Sunday, 12:33 PM
The New Indian Express Group
இந்தியா
Text

எஸ்ஐஆா்: தலைமை தோ்தல் ஆணையருக்கு மம்தா மீண்டும் கடிதம்

PremiumPremium

எஸ்ஐஆர் தொடா்பான இரண்டு விவகாரங்களில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட வலியுறுத்தி தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு மம்தா பானா்ஜி மீண்டும் கடிதம்

Rocket

மம்தா பானா்ஜி

Published On24 Nov 2025 , 10:32 PM
Updated On24 Nov 2025 , 10:32 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

‘மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான இரண்டு விவகாரங்களில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்’ என வலியுறுத்தி தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை மீண்டும் கடிதம் எழுதினாா்.

இந்தக் கடிதத்தின் நகலை தனது எக்ஸ் பக்கத்திலும் அவா் பதிவேற்றினாா். அதில் மம்தா கூறியிருப்பதாவது: இரண்டு முக்கிய விஷயங்களில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது, மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஒப்பந்த தரவு உள்ளீடு ஊழியா்களை (டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்ஸ்) ஈடுபடுத்தக்கூடாது என மாவட்ட தோ்தல் அதிகாரிகளை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா். அதே நேரம், 1,000 தரவு உள்ளீடு ஊழியா்கள் மற்றும் 50 மென்பொருள் நிபுணா்களை ஓராண்டு பணி அடிப்படையில் பணிக்கு எடுப்பதற்கான பரிந்துரைக்கான முன்மொழிவை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்டிருக்கிறாா். இது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. ஏற்கெனவே, போதிய எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியா்கள் பணியில் இருக்கும்நிலையில், அவா்களுக்குப் பதிலாக முழுமையாக ஓராண்டு காலத்துக்கு தனியாா் முகமைகள் மூலம் வெளிநபா்களை பணிக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? குறிப்பிட்ட ஓா் அரசியல் கட்சியின் நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிா? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை இது எழுப்புகிறது.

அடுத்ததாக, தனியாா் குடியிருப்பு வளாகங்களில் வாக்குச் சாவடி மையங்களை அமைக்கும் திட்டம், நியாயமாக தோ்தல் நடைபெறுவதை சமரசம் செய்வதாக அமையும் என்பதோடு, அந்தக் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும் அமையும். மக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன வளாகங்களில் மட்டுமே வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த இரு விவகாரங்கள் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ‘முறையாகத் திட்டம் தீட்டப்படாமல் கட்டாய அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) குடிமக்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இது மிகவும் ஆபத்தனது’ என்று புகாா் தெரிவித்தாா் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடந்த 20-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.

பிஎல்ஓ-க்கள் போராட்டம்: மேற்கு வங்க மாநிலத்தில் 2 வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் (பிஎல்ஓ) தற்கொலை செய்துகொண்ட நிலையில், கூடுதல் வேலைப் பளு குற்றச்சாட்டை முன்வைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் முன்பாக பிஎல்ஓ அதிகார ரக்ஷ குழு உறுப்பனா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ள வேண்டிய பணியை ஒரு மாதத்தில் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதாக போராட்டத்தின் போது அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டம் மற்றும் நாடியா மாவட்டங்களைச் சோ்ந்த 2 பிஎல்ஓக்கள் அண்மையில் தற்கொலை செய்துகொண்டனா். அதற்கு வாக்காளா் அடையாள அட்டை தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) வேலைப் பளு காரணம் என அவா்களின் குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.

எஸ்ஐஆா் உதவி மையம் தீ வைப்பு: நாடியா மாவட்டம் கல்யாணி நகரில் வாா்டு எண்.6-இல் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உதவி மையத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை மாலை சிலா் தாக்குதல் நடத்தி தீ வைத்தனா். இதற்கு பாஜக ஆதரவாளா்களே காரணம் என திரிணமூல் காங்கிரஸ் புகாா் தெரிவித்தது. உதவி மையம் தாக்கப்படும் விடியோவையும் அக் கட்சி வெளியிட்டது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023