டிச.14ல் வாக்குத் திருட்டு எதிர்ப்பு பேரணி: ஒடிஸா காங்கிரஸ் தலைவர்!
வாக்குத் திருட்டு பேரணி பற்றி.
வாக்குத் திருட்டு பேரணி பற்றி.
By இணையதளச் செய்திப் பிரிவு
Parvathi
அரசியலமைப்பு தினத்தை மாநிலம் தழுவிய அளவில் கொண்டாடுவதற்கான திட்டங்களை அறிவித்த அவர், டிச.14ஆம் தேதி வாக்குத் திருட்டு என்ற பெயரில் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் தெரிவித்தார்.
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான பேரணியில் பங்கேற்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் ஒடிசாவிலிருந்து 5 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர்,
கட்சியின் எம்.எல்.ஏக்கள், போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் இரண்டு கட்டக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். ஏஐசிசியின் அறிவுறுத்தல்களின்படி முழு மாநிலத்திலும் அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாடுவோம். டிசம்பர் 14-ம் தேதி வாக்குத் திருட்டு என்ற பெயரில் பிரதிநிதி கூட்டமும் நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒடிசாவிலிருந்து 5000 பேர் பங்கேற்பார்கள் என்றார்.
நுவாபாடா இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தாஸ், எங்களுக்கு அனைத்து பிராந்திய ஆதரவும் இருந்தது. ஆனால் பாஜக சாத்தியமான அனைத்து அநீதிகளையும் செய்து வாக்குகளைக் கொள்ளையடித்து வெற்றி பெற்றது. காங்கிரஸ் மாநிலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. 2029ல் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது அதிக சுமை காரணமாக பூத் நிலை அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன காரகே பாஜகவுக்கு எதிராகக் கடுமையான தாக்குதலைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Odisha Congress President Bhakta Charan Das has announced plans for a statewide celebration of 'Constitution Day' and said that a rally will be held on December 14 over 'Vote Chori'.
இதையும் படிக்க: ஸ்மிருதி மந்தனாவின் மணமகனும் மருத்துவமனையில் அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது