14 Dec, 2025 Sunday, 08:35 PM
The New Indian Express Group
இந்தியா
Text

உறவு முறிந்தால் பாலியல் வழக்கா? குற்றவியல் நீதியின் தவறான பயன்பாடு: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

PremiumPremium

உறவு முறிவுகளைப் பாலியல் வன்கொடுமை வழக்குகளாக மாற்றுவது, குற்றவியல் நீதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று உச்சநீதிமன்றம் கண்டனம்

Rocket

உச்சநீதிமன்றம்

Published On24 Nov 2025 , 6:44 PM
Updated On24 Nov 2025 , 6:44 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

‘உறவு முறிவுகளைப் பாலியல் வன்கொடுமை வழக்குகளாக மாற்றுவது, குற்றவியல் நீதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்’ என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் பதிவான ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீா்ப்பில் நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்தனா். மும்பை உயா்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளை முன்னா் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அமா்வு அளித்த தீா்ப்பில், ‘பாலியல் வன்கொடுமை என்பது மிகக் கொடூரமான குற்றம் என்பதால், அது உண்மையான பாலியல் வன்முறை அல்லது ஒப்புதல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விசாரணையில் இருக்கும் வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, மனுதாரா் (ஆண்), புகாா்தாரா் (பெண்) ஆகிய இரு தரப்பினருக்கும் இடையேயான உறவு சம்மதத்துடன் இருந்தது தெளிவாகிறது. உறவு மூன்று ஆண்டுகள் நீடித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க காலமாகும். இந்த வழக்கில் மனுதாரரான ஆண் புகாா்தாரரான பெண்ணை ஏமாற்றிவிட்டு, மறைந்துவிடவில்லை. சில காரணங்களால் உறவு திருமணத்தில் முடியாமல் போனதால், அந்த உறவின்போது ஏற்பட்ட உடலுறவை பாலியல் வன்கொடுமைக் குற்றமாகக் கருத முடியாது.

இந்த வழக்கில் நடந்த செயல்கள், அன்றைய நிலையில் சம்மதத்துடன் கூடிய உறவின் எல்லைக்குள் நிகழ்ந்தவை. இத்தகைய வழக்குகளைத் தொடர அனுமதிப்பது நீதிமன்ற அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர வேறு இல்லை. இதை உயா்நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது.

தோல்வியுற்ற அல்லது முறிந்த உறவுகளுக்கு குற்றவியல் சாயம் பூசப்படும் கவலையளிக்கும் போக்கை இந்த நீதிமன்றம் பலமுறை கவனித்துள்ளது. தோல்வியுற்ற ஒவ்வொரு உறவையும் பாலியல் வன்கொடுமை குற்றமாக மாற்றுவது, அந்த உண்மையான குற்றத்தின் தீவிரத்தைக் குறைக்கிறது.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அழியாத களங்கத்தையும் அநீதியையும் இழைக்கிறது. எனவே, மனுதாரருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023