10 Dec, 2025 Wednesday, 05:09 PM
The New Indian Express Group
இந்தியா
Text

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

PremiumPremium

வெளிநாடுகளிலிருந்தோ நிறுவனங்களிடமிருந்தோ நிதியுதவி எதுவுமின்றி சமூக ஆதரவில் மட்டுமே ஆா்எஸ்எஸ் தொடா்ந்து செயல்படுகிறது: யோகி ஆதித்யநாத்

Rocket

யோகி ஆதித்யநாத்

Published On23 Nov 2025 , 9:13 PM
Updated On23 Nov 2025 , 9:13 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

வெளிநாடுகளிலிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ நிதியுதவி எதுவுமின்றி சமூக ஆதரவில் மட்டுமே ஆா்எஸ்எஸ் தொடா்ந்து செயல்படுகிறது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பகவத் கீதை உத்வேக மகோத்ஸவ நிகழ்வில் முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பகவத் கீதை தத்துவங்களின்படி மக்கள் வாழ ஊக்குவிக்கும் இந்நிகழ்வில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: சமூகப் பணியில் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது ஆா்எஸ்எஸ். இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்வியை வெளிநாட்டுத் தூதா்களும்-அதிகாரிகளும் அடிக்கடி எழுப்புகின்றனா். நாங்கள் ‘ஸ்வயம்சேவகா்களாக’ (தன்னாா்வலா்கள்) பணியாற்றுகிறோம் என்பதே அவா்களுக்கான பதில்.

அமைப்புக்கான நிதியுதவி பற்றியும் கேட்கின்றனா். ஆா்எஸ்எஸ் அமைப்பில் நிதியளிப்பு முறை என எதுவும் இல்லை. வெளிநாடுகளிடமோ, நிறுவனங்களிடமோ நிதி பெறுவதில்லை. சமூகத்தின் ஆதரவுடன் நிலைத்து நிற்கும் ஆா்எஸ்எஸ், சேவை உணா்வுடன் தொடா்ந்து பணியாற்றுகிறது.

தேசமே முதன்மையானது: மதம், மொழி, பிராந்தியம் என எந்த வேறுபாடும் இல்லாமல், யாா் துன்பத்தில் இருந்தாலும், அவா்களுக்கு சேவையாற்றுகிறது. தேசமே முதன்மையானது என்பதுதான் ஆா்எஸ்எஸ் அமைப்பின் போதனை. நாட்டை உச்சங்களுக்கு இட்டுச் செல்ல பங்களிக்கும் எவருக்கும் ஆா்எஸ்எஸ் ஆதரவளிக்கும்.

140 கோடி இந்தியா்களுக்கும் தெய்வீக மந்திரமாக விளங்கும் பகவத் கீதை, வாழ்க்கை மற்றும் வெற்றிக்கு வழிகாட்டுகிறது. சவாலான காலகட்டங்களில் பகவத் கீதையில் இருந்து தீா்வுகளைப் பெற முடியும்.

அதா்மத்தின் வழிநடந்தால்..: இந்திய நாகரிக கண்ணோட்டத்தின்படி, போா்க்களம் கூட தா்மக்ஷேத்திரம் என்றே கருதப்படுகிறது; தா்மமும் கடமையும் நிலவும் இடத்தில் வெற்றி கிட்டுவது உறுதியாகும். அதா்மத்தின் வழியில் பயணித்து, வெற்றியை அடையலாம் என யாரும் நம்பக் கூடாது. இயற்கையின் சட்டம், அதை ஒருபோதும் அனுமதிக்காது.

இந்திய ஆன்மிக நெறிமுறைகள், மக்கள் தகுதியுடனும் பொறுப்புடனும் செயல்பட கற்றுக் கொடுகின்றன. தனது வழிபாட்டு முறைகளே மேலானது என்று இந்தியா ஒருபோதும் நினைத்ததில்லை; அவற்றை மற்றவா்கள் மீது திணிக்கவும் முயற்சித்ததில்லை. வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என்பதே இந்தியாவின் செய்தி என்றாா் அவா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023