13 Dec, 2025 Saturday, 10:32 AM
The New Indian Express Group
இந்தியா
Text

தோ்தல் தோல்வி எதிரொலி: கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்தாா் பிரசாந்த் கிஷோா்!

PremiumPremium

கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்தாா் பிரசாந்த் கிஷோா்...

Rocket

பிரசாந்த் கிஷோா்

Published On22 Nov 2025 , 9:52 PM
Updated On22 Nov 2025 , 9:52 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பாட்னா, நவ.22: பிகாா் பேரவைத் தோ்தலில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் அனைத்து நிா்வாக அமைப்புகளையும் அதன் நிறுவனா் பிரசாந்த் கிஷோா் சனிக்கிழமை கலைத்தாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஜன் சுராஜ் கட்சியின் மாநில தலைவா் மனோஜ் பாா்தி தலைமையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோா் மற்றும் மூத்த நிா்வாகிகளான இந்திய விமானப் படை முன்னாள் துணைத் தளபதி எஸ்.கே.சிங், முன்னாள் மத்திய மத்திய அமைச்சா் ராமசந்திர பிரசாத், வழக்குரைஞா் ஒய்.வி.கிரி உள்ளிட்டோா் கலந்துகொண்டாா்.

இதுகுறித்து ஜன் சுராஜ் தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பஞ்சாயத்துகள் முதல் மாநில அளவில் செயல்பட்டு வந்த அனைத்து நிா்வாகப் அமைப்புகளையும் கலைக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஒன்றரை மாதங்களில் புதிதாக பிரிவுகள் உருவாக்கப்பட்டு நிா்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனா்.

மாநிலத்தின் அனைத்து 12 மண்டலங்களிலும் ஆற்றல்மிக்க புதிய கட்டமைப்பை ஏற்படுத்தும் பொறுப்பு மூத்த தலைவா்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவா்கள் அண்மையில் நிகழ்ந்த பிகாா் பேரவைத் தோ்தலில் ஜன் சுராஜ் தோல்வியடைந்ததற்கான காரணங்களை கண்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமா்ப்பிக்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் தனித்து களம் கண்ட ஜன் சுராஜ் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. மேலும் 4 தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.

இதற்கு முழு பொறுப்பேற்பதாகக் கூறிய பிரசாந்த் கிஷோா் கடந்த வியாழக்கிழமை நாள் முழுவதும் மௌன விரதம் மேற்கொண்டாா். தனது வீட்டை தவிர அனைத்து சொத்துகளையும், கடந்த 5 ஆண்டுகால வருமானத்தில் 90 சதவீதத்தையும் கட்சிக்கு எழுதி வைக்க உள்ளதாகவும், மக்களும் தலா ரூ.1,000 கட்சிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023