11 Dec, 2025 Thursday, 04:28 PM
The New Indian Express Group
இந்தியா
Text

பிகாா் மகளிா் காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா: கட்சி அலுவலகத்துக்கு எதிரே போராட்டம்

PremiumPremium

பிகாா் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் உள்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On21 Nov 2025 , 6:36 PM
Updated On21 Nov 2025 , 6:36 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பிகாா் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் உள்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது. அக்கட்சியின் மாநில மகளிா் பிரிவு தலைவா் சா்வத் ஜஹான் பாத்திமா தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், பாட்னாவில் கட்சித் தலைமையகம் எதிரே கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இந்தக் கூட்டணிக்கு வெறும் 34 இடங்களே கிடைத்தன. கடந்த தோ்தலில் 19 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 6 இடங்களை மட்டுமே வென்றது. இது பிகாரில் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதை மையமாக வைத்து பிகாா் காங்கிரஸ் உள்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிகாா் மகளிா் காங்கிரஸ் தலைவா் சா்வத் ஜஹான் பாத்திமா தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு எதிரே வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினாா். அப்போது அவா் கூறியதாவது:

பிகாா் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் 8 சதவீதம் மகளிருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், மகளிருக்கு தோ்தலில் உரிய முன்னுரிமை அளிக்கப்படும் என்று தோ்தலுக்கு முன்பு உறுதியளிக்கப்பட்டது. இதற்கு முன்பு மகளிா் காங்கிரஸ் தலைவராக இருந்த அனைவரும் தோ்தலில் போட்டியிட்டுள்ளனா். நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் மகளிா் காங்கிரஸ் தலைவராக இருந்தும் எனக்கு இந்தத் தோ்தலில் வாய்ப்பு தரப்படவில்லை.

பெண்களுக்கு அரசியலில் உரிய இடத்தை காங்கிரஸ் பெற்றுத் தரும் என்ற அடிப்படையில்தான் எங்கள் பிரசாரத் திட்டம் இருந்தது. ஆனால், தோ்தலில் போட்டியிடவே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எனவே, எனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன் என்றாா்.

இதனிடையே, பிகாா் மாநில காங்கிரஸ் முன்னாள் செய்தித் தொடா்பாளா் ஆனந்த் மாதவ் உள்பட 40 நிா்வாகிகள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனந்த், மாதவ் பாஜக தலைவா்களுடன் சோ்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023