பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செங்கோட்டையில் நடைபெறும் பிரம்மாண்ட கூட்டம்: முதல்வா் ரேகா குப்தா ஆய்வு

செங்கோட்டையில் நடைபெறும் பிரம்மாண்ட கூட்டம்: முதல்வா் ரேகா குப்தா ஆய்வு

News image

செங்கோட்டை - ANI

Updated On :21 நவம்பர் 2025, 8:00 pm

குரு தேக் பகதூரின் 350வது நினைவு தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் நடைபெறும் மூன்று நாள் பிரமாண்டமான கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா பங்கேற்றாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை அவா் பதிவிட்டதாவது: முதலமைச்சரின் பொது சேவை இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்துத் தரப்பு பிரதிநிதிகள், எம்.பி.க்கள், கேபினட் அமைச்சா்கள் மற்றும் பொதுப் பிரதிநிதிகள் கூட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பகிா்ந்து கொண்டனா்.

நவம்பா் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் நடைபெறும் இந்தப் பிரமாண்டமான கூட்டம், மனிதகுலம், உண்மை மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்காக குரு தேக் பகதூா் செய்த தியாகத்திற்கு நன்றியுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

குரு சாஹிப்பின் தியாகம், இரக்கம், தைரியம் மற்றும் மனிதநேயம் பற்றிய செய்தியை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பரப்ப நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

குரு சாஹிப்பின் அழியாத போதனைகளை முழு சமூகமும் ஒன்றிணைந்து உள்வாங்கிக்கொள்ளும் வகையில், இந்தக் கூட்டத்தை உண்மையிலேயே பிரமாண்டமாகவும், கண்ணியமாகவும், பொதுமக்களின் பங்கேற்பால் வளப்படுத்தவும் தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது என தில்லி முதல்வா் ரேகா குப்தா பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.