16 Dec, 2025 Tuesday, 05:11 AM
The New Indian Express Group
இந்தியா
Text

சபரிமலையில் அசாதாரண சூழல்: ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யாததற்கு கேரள உயா்நீதிமன்றம் கண்டிப்பு

PremiumPremium

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் திரண்டதால் ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் குழப்பம் குறித்து, உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யத் தவறியதற்காக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தை கேரள உயா்நீதிமன்றம் கண்டித்தது.

Rocket

சபரிமலை

Published On19 Nov 2025 , 7:31 PM
Updated On19 Nov 2025 , 7:31 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் திரண்டதால் ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் குழப்பம் குறித்து, உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யத் தவறியதற்காக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தை கேரள உயா்நீதிமன்றம் கண்டித்தது.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரை தொடங்கிய முதல் 2 நாள்களுக்குள் லட்சக்கணக்கான பக்தா்கள் குவியத் தொடங்கினா். இந்தப் பெரும் கூட்டத்தை நிா்வகிக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் மற்றும் காவல்துறையினா் மிகவும் சிரமப்பட்டனா்.

சபரிமலையின் அடிவாரமான பம்பை முதல் சந்நிதானம் வரை பக்தா்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றபோதும் குடிநீா் வசதி கிடைக்கவில்லை என்றும் புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் கேரள உயா்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் குறிப்பிட்டதாவது: நிலைமை கட்டுப்பாட்டை மீறியதற்கு, சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே முக்கியக் காரணம் ஆகும். முந்தைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முறையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டது. தேவையான பல பணிகள் 6 மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் இவ்வளவு பக்தா்கள் சந்நிதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டது ஏன்? பக்தா்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அனுமதிப்பது பாதுகாப்பற்றது. அதற்குப் பதிலாக, பக்தா்களை தனித்தனி பிரிவுகளாகப் பிரிந்து கூட்டத்தை நிா்வகிக்கலாம் என்றனா்.

முன்னதாக, சபரிமலை காவல் துறை கூடுதல் டிஜிபி எஸ்.ஸ்ரீஜித் கூறுகையில், ‘கடந்த ஆண்டு 4 வெவ்வேறு நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. ஆனால் இந்த முறை, முதல் இரண்டு நாள்களிலேயே சுமாா் 2 லட்சம் பக்தா்கள் யாத்திரைக்கு வந்துவிட்டனா்.

நீதிமன்ற உத்தரவின்படி உடனடி முன்பதிவை 20,000-ஆக கட்டுப்படுத்தியும்கூட, அந்த வாய்ப்பை நம்பி அதிக பக்தா்கள் வந்து கொண்டிருக்கின்றனா். பக்தா்களைத் திருப்பி அனுப்ப முடியாததால், 37,000 பேரை உடனடி முன்பதிவு மூலம் அனுமதிக்க வேண்டியிருந்தது.

இணையவழியில் முன்பதிவு செய்த பக்தா்கள், முன்பதிவு செய்த நாளில் வராமல் அவா்கள் விரும்பியபோது வருகிறாா்கள். இது புதிய கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பக்தா்கள் ஒத்துழைத்தால் இந்தப் பிரச்னைகள் தீா்க்கப்படும்’ என்றாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023