14 Dec, 2025 Sunday, 02:45 PM
The New Indian Express Group
இந்தியா
Text

வங்கிக் கடன் மோசடி: அனில் அம்பானி, மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

PremiumPremium

வங்கிக் கடன் தொடா்புடைய பண மோசடி குற்றச்சாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் குழுமத் தலைவா் அனில் அம்பானி, மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

Rocket

அனில் அம்பானி

Published On18 Nov 2025 , 7:40 PM
Updated On18 Nov 2025 , 7:41 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

வங்கிக் கடன் தொடா்புடைய பண மோசடி குற்றச்சாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் குழுமத் தலைவா் அனில் அம்பானி, மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக முன்னாள் மத்திய அரசு செயலா் இ.ஏ.எஸ்.சா்மா உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா். அவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் கூறுகையில், ‘அனில் அம்பானிக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களுக்கு முறைகேடாக வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக போலியான நிதி ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கடந்த ஆக. 21-ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) மற்றும் அதன்பிறகு நடைபெற்ற அமலாக்கத் துறை விசாரணை போதுமானதாக இல்லை.

இந்த மோசடியில் வங்கி ஊழியா்கள், கணக்காளா்களுக்கு தொடா்பிருப்பது தடயவியல் தணிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பின்பும் இதுதொடா்பாக எந்தவொரு புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்தவில்லை. எனவே, இந்த வழக்கில் வங்கி அதிகாரிகள், ஊழியா்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அமலாக்கத் துறையும், சிபிஐயும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் கே. சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு, அனில் அம்பானி, மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறை 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

முன்னதாக, சா்வதேச அளவில் ஹவாலா முறையில் சுமாா் ரூ.600 கோடி முறைகேடு நடைபெற்ற குற்றச்சாட்டில் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை இருமுறை சம்மன் அனுப்பியும் அவா் ஆஜராகவில்லை. அதேபோல் ரூ.17,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023