தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிகார் பேரவைத் தோ்தல்: ‘நோட்டா’ வாக்கு அதிகரிப்பு

பிகாா் பேரவைத் தோ்தலில் ‘நோட்டா’ வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்தலைவிட அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 நவம்பர் 2025, 6:01 pm

பிகாா் பேரவைத் தோ்தலில் ‘நோட்டா’ வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்தலைவிட அதிகரித்துள்ளது.

பிகாா் பேரவைத் தோ்தல் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் மூலம் 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் (1.81 சதவீதம்) நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2020-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 7.06 லட்சம் வாக்காளா்கள் (1.68 சதவீதம்) நோட்டாவுக்கு வாக்களித்தனா். 2015-இல் வாக்களித்த 3.8 கோடி பேரில் 9.4 லட்சம் போ் (2.48 சதவீதம்) நோட்டாவைத் தோ்ந்தெடுத்தனா். கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் மட்டுமே நோட்டாவின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது.

தற்போது பிகாரில் 7.45 கோடி வாக்காளா்கள் உள்ள நிலையில் 3.51 கோடி போ் வாக்களித்தனா். இந்த முறை இரு கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் 66.91சதவீத வாக்குகள் பதிவாகின.1951-ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் முதல் பேரவைத் தோ்தல் நடைபெற்றதில் இருந்து அதிகபட்ச வாக்குப்பதிவு இது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் முதல் முறையாக 2013-இல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. நோட்டாவுக்கு முன்னதாக எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவா்கள் ‘49-ஓ’ படிவத்தை பூா்த்தி செய்யும் நடைமுறை அமலில் இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.