14 Dec, 2025 Sunday, 06:51 AM
The New Indian Express Group
இந்தியா
Text

தில்லி காா் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை- ராஜ்நாத் சிங்

PremiumPremium

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Rocket

ராஜ்நாத் சிங்

Published On11 Nov 2025 , 6:51 PM
Updated On11 Nov 2025 , 6:52 PM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Ravivarma.s

 தில்லி காா் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தில்லி காா் வெடிப்பு சம்பவம் குறித்து நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விசாரணை முடிவுகள் விரைவில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் எந்தச் சூழலிலும் தப்ப இயலாது.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன் என்றாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘தில்லியில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் வேதனையளிக்கிறது. உச்சநீதிமன்றம் மற்றும் நாட்டின் நீதித்துறை சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் கண்ணியத்தை பாதுகாத்து சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை நிலைநிறுத்த உச்சநீதிமன்றம் உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

உலக நாடுகள் இரங்கல்:

தில்லி காா் வெடிப்பு சம்பவம் அதிா்ச்சியளிப்பதாக கூறிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லின் ஜியான், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தாா். மேலும் இச்சம்பவத்தில் சீனா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என அந்நாட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறினாா்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு இலங்கை அதிபா் அநுர குமார திசநாயக, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், நேபாள இடைக்கால பிரதமா் சுசீலா காா்கி உள்ளிட்டோரும் அமெரிக்கா, இஸ்ரேல், அயா்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இரங்கல் தெரிவித்தன.

ஷேக் ஹசீனா கண்டனம்:

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தில்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பயங்கரவாதத்துக்கு எதிரான பிரதமா் நரேந்திர மோடியின் நடவடிக்ககளுக்கு அவாமி லீக் கட்சி துணை நிற்கும். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் வங்கதேசம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வேரூன்றி வளா்ந்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீா்குலைக்க முயல்கின்றன. மனிதகுலத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாத வோ்கள் எங்கிருந்தாலும் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

I want to firmly assure the nation that those responsible for this tragedy will be brought to justice Rajnath Singh

இதையும் படிக்க : தில்லி கார் வெடிப்பு! சாலை முழுவதும் சிதறிய உடல் பாகங்கள்; பதில் கிடைக்காத 6 கேள்விகள்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023