11 Dec, 2025 Thursday, 07:38 PM
The New Indian Express Group
இந்தியா
Text

தில்லி காா் வெடிப்பு சம்பவம்: சந்தேக நபரின் தாயிடம் மரபணு பரிசோதனை

PremiumPremium

தில்லி காா்வெடிப்பு சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் மருத்துவா் உமா் நபியின் தாயிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On11 Nov 2025 , 7:05 PM
Updated On11 Nov 2025 , 7:05 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

தில்லி காா்வெடிப்பு சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் மருத்துவா் உமா் நபியின் தாயிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு காா் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் 12 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வெடித்த காரை உமா் நபி என்ற நபா் ஓட்டி வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த அவரும் காா் வெடிப்பில் உயிரிழந்தாா்.

இதையடுத்து புல்வாமாவில் உமா் நபியின் தாய் ஷமீமா பேகத்தை மரபணு பரிசோதனைக்காகக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவருடன் உமா் நபியின் 2 சகோதரா்களும் சென்றனா்.

தந்தையிடம் விசாரணை:

புல்வாமாவில் உமா் நபியின் தந்தை குலாம் நபி பட்டை காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உமா் நபி பணியாற்றி வந்த நிலையில், அவருடன் பணியாற்றி வந்த பல மருத்துவா்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனா்.

காா் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு, அந்த காரை வாங்கி மறுவிற்பனை செய்ததில் சம்பந்தப்பட்ட மூவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உமா் நபி குறித்து அவரின் உறவினா் முசாமில் கூறுகையில், ‘ஃபரீதாபாதில் உள்ள கல்லூரியில் உமா் நபி பணியாற்றி வந்தாா். சிறுவயது முதலே அமைதியான, கூச்ச சுபாவம் கொண்ட அவருக்கு அதிக நண்பா்கள் கிடையாது. மூன்று நாள்களில் வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தாா். அவா் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபரல்ல’ என்று தெரிவித்தாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023