தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார்.

News image
அனுப் குமார் நாயர் (முன்பு / ஆசிரமத்தால் மீட்கப்பட்ட பின்பு) - படம் - எஸ்இஏஎல்
Updated On :30 ஜூன் 2025, 2:26 pm

DIN

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.

வீட்டில் உள்ள குப்பைகளைக் கொட்ட வெளியே வருவது கூட அபூர்வம் என்றும், அண்டை வீட்டினர் வற்புறுத்திய பிறகே குப்பைகளைக் கூட வெளியே கொட்டுவார் எனவும் அண்டை வீட்டினர் குறிப்பிடுகின்றனர்.

நவி மும்பையின் கார்குல் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 55 வயதுடைய தொழில்நுட்பத் துறை ஊழியர் ஒருவர் பூட்டிய வீட்டிலேயே இருந்துள்ளார்.

அனுப் குமார் நாயர் என்ற பெயருடைய இவர், தன்னார்வலர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், அன்பின் சுவிஷேச சங்க ஆசிரமத்தின் உதவியுடன் பூட்டிய அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

3 ஆண்டுகளாக முடி வெட்டாமல், சவரம் செய்யாமல் உடல் நிலையும் மோசமாகி மீட்கப்பட்டுள்ளார். அவரின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மீட்ட ஆசிரமம் தெரிவித்துள்ளது.

அனுப் குமாரின் தாயார் பொன்னம்மா நாயர், இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். இவரின் தந்தை குட்டி கிருஷ்ணன் நாயர், டாடா மருத்துவமனையில் பணிபுரிந்தவர். இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், கடும் மன உளைச்சலில் சிக்கியுள்ளார் அனுப் குமார்.

உறவினர்கள், நண்பர்கள் மீது நம்பிக்கை இழந்த அவர், பூட்டிய அறையில் தனிமையில் கடந்த 3 ஆண்டுகளைக் கழித்துவந்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ஆசிரமத்தின் ஊழியர் ஒருவர், ''அனுப் குமார் நாற்காலியில் அமர்ந்து உறங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரின் வீட்டில் இருந்த மரச்சாமன்களை யாரோ எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. நாற்காலியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உடனடி சிகிச்சைத் தேவைப்படும் அளவுக்கு அவரின் காலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் இறந்ததைத் தொடர்ந்து உறவினர்கள் பலர் அனுப் குமாரை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அனுப் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. மற்றவர்கள் மீது நம்பிக்கை இழந்தவராக அவர் உள்ளார். தற்போது அவர் ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.

summary

A tech worker in Mumbai has been living in a locked room for 3 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.