கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவரை இந்நாள் மாணவா் இருவரும், முன்னாள் மாணவா் ஒருவரும் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை 3 பேரையும் கொல்கத்தா போலீஸ் கைது செய்தது. இந்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
என்ன சொன்னார்?
திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா சனிக்கிழமை(ஜூன் 28) பேசுகையில், “இச்சம்பவம் மாணவிகளுக்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்கிறது. அது என்னவெனில், கல்லூரி மூடியிருக்கும் வேளையில் உங்களை(பெண்களை) எவர் ஒருவராவது அழைத்தால் அப்போது அங்கு தனியாகச் செல்லாதீர்கள். அதனால் எவ்வித நல்லதும் நடக்கப் போவதில்லை. பாதிக்கப்பட்ட அந்த பெண் சம்பவ இடத்துக்கு அன்று செல்லாமல் தவிர்த்திருந்தால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்காது” என்றார்.
அவரது இந்த கருத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே முதலில் தவறு இருப்பதாக பொருள் உணர முடிவதாகக் கூறி அவருக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அவரது சொந்த கருத்து. இதற்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் கண்டனம் தெரிவித்தும் உடனடியாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டது.
இந்தநிலையில், இது தொடர்பாக மதன் மித்ராவிடம் உரிய விளக்கம் கேட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைமை இன்று(ஜூன் 29) அழைப்பாணை அனுப்பியுள்ளது. மூன்று நாள்களுக்குள் அவர் விளக்கமளிக்க அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Kolkata gangrape case: TMC issues show-cause notice to Madan Mitra for his controversial remarks
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து
100-க்கும் மேற்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாஜக கவுன்சிலர் மகன்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை

மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய நெடுஞ்சாலையில் 9 மணி நேரம் நீடித்த மறியல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


