திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது...

News image

கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2025, 9:08 am

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர்.

உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று, ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை பிடிப்பதற்கான பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் மற்றும் மாநில காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளில், பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவிகளுடன் இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தேடப்பட்ட ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 4 பேர் கரோர் நல்லாஹ் பகுதியில் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர்கள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தவுடன், இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான பயங்கரவாதி, ஹைதர் (எ) ஜப்பார் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.