திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரசு!

மத்திய அரசின் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் பட்டியல் வெளியீடு..

News image
நக்சல் பாதிப்பு
Updated On :28 ஜூன் 2025, 7:25 am

DIN

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் முழுவதும் மற்றும் கோண்டியாவில் உள்ள நான்கு தாலுக்காக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கட்சிரோலியின் ஒரு பகுதியை மாவோயிஸ்ட் நடவடிக்கை இல்லாதது என்று அறிவித்ததையடுத்து, தெற்கு கட்சிரோலி விரைவில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும் என்று உறுதியளித்தார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அரசுத் தீர்மானத்தில், கோண்டியா மாவட்டத்தில் உள்ள சலேகாசா, தேவ்ரி மற்றும் அர்ஜுனி மோர்கான் தாலுகாக்கள் மற்றும் முழு கட்சிரோலி மாவட்டமும் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஃபட்னவீஸ் கூறியது, கட்சிரோலி பெரும்பாலும் மகாராஷ்டிரத்தின் கடைசி மாவட்டம் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது மாநிலத்தின் கிழக்கு எல்லையில் உள்ளது. மகாராஷ்டிரம் விரைவில் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும். மாவோயிஸ்ட்களில் அதிகமானோர் சரணடைந்து வருவதாகவும், அதேசமயம் புதியவர்கள் யாரும் சேர மறுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

கட்சிரோலி காவல்துறை மாவட்டத்தில் நக்சல் நடவடிக்கைகளைக் கிட்டத்தட்ட ஒழித்து விட்டது. வடக்கு கட்சிரோலி இப்போது மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் இல்லாமல் உள்ளது, தெற்கு கட்சிரோலி விரைவில் நக்சல்களிடமிருந்து விடுபடும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கட்சிரோலி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளில் நக்சல்களின் ஆதிக்கம் குறைந்து வருவதாக அவர் கூறினார்.

மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதன் மூலம் கட்சிரோலியை முதல் மாவட்டம் ஆக்குவதற்கான செயல்முறையை அரசு தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

SUMMARY

The entire Gadchiroli district and four talukas in Gondia remain "Naxal-infested", according to the Maharashtra government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.