நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 55, சி-5 இல் உள்ள ஆனந்த் நிகேதன் விருதா சேவா ஆசிரமத்தின் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையம் மற்றும் மாநில நலத்துறை உறுப்பினர்கள் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அது ஒரு சட்டவிரோத முதியோர் இல்லம் என்று மகளிர் ஆணைய உறுப்பினர் மீனாட்சி பரலா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சோதனையின் போது, வயதான பெண் ஒருவர் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். மற்ற முதியவர்கள் அடித்தளம் போன்ற அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர். சில ஆண்களிடம் துணிகள் கூட இல்லை, அதே நேரத்தில் பல வயதான பெண்கள் அரைகுறை ஆடையுடன் காணப்பட்டனர். இந்த முதியோர் இல்லம் முற்றிலும் சட்டவிரோதமானது.
ஆசிரமத்தில் 42 முதியோர் வசித்து வந்தனர். அவர்களில் மூன்று முதியோர் வெள்ளிக்கிழமை சமூக நலத்துறையால் நடத்தப்படும் முதியோர் இல்லத்திற்கு மாற்றப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் அடுத்த ஐந்து நாள்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற முதியோர் இல்லங்களுக்கு மாற்றப்படுவார்கள். நிர்வாகத்தின் உதவியுடன் முதியோர் இல்லம் சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
SUMMARY
Forty-two elderly people were rescued from an "illegal" old-age home after a police raid at the institution found some women tied up, many residents without clothes and others in "basement-like" rooms, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீல்சேர் வசதி இல்லாததால் வாக்களிக்க வந்த முதியவர்கள் அவதி!
நொய்டாவில் தொழிலாளா்கள் போராட்த்தின் போது வன்முறை: மேலும் 2 போ் கைது

நொய்டாவில் 28-ஆவது மாடியிலிருந்து குதித்து 21 வயது மாணவி தற்கொலை

‘ஆபரேஷன் விஸ்வாஸ்’!ஷாஹ்தராவில் 120 திருட்டு கைப்பேசிகள் மீட்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


