தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

அமைச்சர் நாரா லோகேஷ் பற்றி பிரதமர் மோடி...

News image

விசாகப்பட்டினத்தில் நாரா லோகேஷ் - மோடி - படம்| நாரா லோகேஷ் பதிவு

Updated On :21 ஜூன் 2025, 12:17 pm

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.

சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்திலுள்ள் விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, கின்னஸ் உள்பட பல்வேறு உலக சாதனைகளைப் படைக்கும் என்று மாநில முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

Story image

PTI

இந்தநிலையில், இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் மோடி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷைப் புகழ்ந்து பேசினார்.

அவர் பேசியதாவது: “யோகா நாளை சமூகத் திருவிழாவாக மாற்றி நடத்தியதற்காக நாரா லோகேஷ், சுமார் ஒன்றரை மாதமாக கடுமையாக உழைத்தார். அவரது முயற்சியால் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து சமூகத் திருவிழாவாக யோகா நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் - PTI

இந்த நிகழ்ச்சிக்கான அவரது திட்டமிடலும் செயல்பாடும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைத்து நடத்திட நாடு முழுவதும் இதே பாணியில் செயல்படலாம்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.