மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பெங்களூரு நகரப் பல்கலை.க்கு மன்மோகன் சிங் பெயர்!

பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்படுவது குறித்து...

News image

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2025, 4:15 pm

கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, இன்று (ஜூலை 2) சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இத்துடன், பெங்களூரு கிராம்ப்புற (ரூரல்) மாவட்டத்தின் பெயரானது பெங்களூரு வடக்கு எனவும், பாகேபள்ளி நகரத்தின் பெயரானது பாக்யநகரா எனவும் மாற்றப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3,400 கோடியில், பெங்களூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பல்கலைக்கழகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Bangalore City University named after Manmohan Singh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.