மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சித்தராமையாவே முதல்வராக தொடருவார்! -டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

கர்நாடக முதல்வர் மாற்றப்படமாட்டார் - டி.கே.சிவகுமார்

News image

டி.கே.சிவகுமார்

Updated On :1 ஜூலை 2025, 2:45 pm

பெங்களூரு: ‘கர்நாடக முதல்வராக சித்தராமையாவே தொடருவார்’ என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு அடிபட்டது.

இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலரும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த கர்நாடகம் வருகை தந்துள்ளார்.

ஆலோசனைக்குப்பின் அவர் இன்று(ஜூலை 1) துணை முதல்வர் சிவகுமாருடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது சுர்ஜேவாலா பேசுகையில், “தலைமை மாற்றம் குறித்த கேள்விக்கான ஒரே பதில் ‘அப்படியெதுவும் இல்லை’ என்பதே” என்று மீண்டுமொருமுறை இன்று தெரிவித்தார்.

இதனையே வலியுறுத்திய சிவகுமார் பேசுகையில், “எம்.எல்.ஏ.க்களை சந்தித்து மனுக்களை பெறவே சுர்ஜேவாலா இங்கு வருகை தந்தார். மேலும், அவர் கட்சிக்குள் ஒழுக்கத்தை கொண்டுவர கட்சி வளர்ச்சிக்கான சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த ஆலோசனையில் தலைமை மாற்றம் குறித்தோ அமைச்சரவை விரிவாக்கம் பற்றியோ எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதற்கான அவசரம் எங்களிடம் இல்லை. எங்களுடைய இலக்கு 2028 தேர்தலைப் பற்றியே இருக்கிறது” என்றார்.

Summary

Siddaramaiah to remain CM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.