ஹிமாசல பிரதேசத்தில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மண்டி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) மாலை முதல் சுமார் 216.8 மி.மீ. அளவிலான மழை பெய்திருப்பது பதிவாகியுள்ளது. இதையடுத்து, அம்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், கர்சோக் பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 12-13 பேர் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், சையாஞ்சு பகுதியில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் மாயமானதாகத் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் ஏராளமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மண்டி மாவட்டத்தின் ஏராளமான கால்நடைகள், வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், அங்குள்ள பல கிராமங்களின் வீடுகள் மற்றும் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன், மாவட்டத்தின் அனைத்து ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், பண்டோஹ் அணையின் நீர்மட்டம் 2,922 அடிக்கு உயர்ந்துள்ளதால், அணையிலிருந்து பியேஸ் ஆற்றுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மண்டி மற்றும் ஹமிர்பூர் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இன்று (ஜூலை 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசத்தின் சம்பா, ஹமிர்பூர், மண்டி, ஷிம்லா, சிர்மவூர் மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணிநேரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Himachal cloudburst: One dead, 12 missing due to heavy rain and flooding!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! ஒருவர் பலி!

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! | Bangladesh bus plunge into river

எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் திடீா் கனமழை

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


