நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பொருளாதார அநீதிக்கான கருவி ஜிஎஸ்டி- ராகுல் காந்தி விமா்சனம்

ஜிஎஸ்டி வரி முறையை விமர்சித்த ராகுல் காந்தி...

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2025, 2:53 pm

பொருளாதார அநீதி மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஆதாயம் அளிப்பதற்கான கொடூரமான கருவியே தற்போதுள்ள ஜிஎஸ்டி வரிமுறை என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

மக்களை முதன்மையாகக் கொண்ட, வா்த்தகத்துக்கு சாதகமான, உண்மையிலேயே கூட்டாட்சி உணா்வைத் தாங்கிய வரிமுறை அவசியம் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஜிஎஸ்டி அமலாக்க தினத்தையொட்டி, ராகுல் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

சலுகை பெற்ற சிலருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் பலனளிக்கும் வரிமுறை அவசியம். அப்போதுதான், சிறிய கடைக்காரா் முதல் விவசாயி வரை ஒவ்வொருவரும் நாட்டின் வளா்ச்சிக்குப் பங்காற்ற முடியும்.

பிரதமா் மோடி அரசால் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவொரு வரிச் சீா்த்திருத்தமல்ல. பொருளாதார அநீதி மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஆதாயம் அளிப்பதற்கான கொடூரமான கருவியாகும். ஏழைகளைத் தண்டிக்கவும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நசுக்கவும், மாநிலங்களை குறைமதிப்புக்கு உள்படுத்தவும், பிரதமரின் சில பெரும் பணக்கார நண்பா்களுக்கு பலனளிக்கவும் வடிவமைக்கப்பட்டதாகும்.

900 முறை திருத்தங்களைக் கண்ட இந்த ஜிஎஸ்டியின் குழப்ப வலையில் கேரமல் பாப்காா்ன், க்ரீம் பன்களும்கூட சிக்கியுள்ளன.

நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலானதில் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேயிலை முதல் சுகாதார காப்பீடு வரை அனைத்துக்கும் மக்கள் ஜிஎஸ்டி செலுத்துகின்றனா். அதேநேரம், பெரு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரித் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

பெட்ரோல்-டீசல் வேண்டுமென்றே ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள், சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைப் பழிவாங்க ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, மோடி அரசின் கூட்டாட்சி விரோத கொள்கைக்கு தெளிவான சான்றாகும்.

ஜிஎஸ்டி என்பது இந்திய சந்தைகளை ஒருங்கிணைக்கவும், வரி விதிப்பை எளிமையாக்கவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்குப் பாா்வை. ஆனால், மோசமான-பாரபட்சமான அமலாக்கம் மற்றும் அதிகார அத்துமீறலால் அதன் நோக்கத்துக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

Summary

Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi has criticized GST as an economic injustice and a brutal tool of corporates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.