வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு விரைவில் கூடி முடிவெடுக்கவுள்ளது.

News image

ஜெ.பி. நட்டா..

Updated On :1 ஜூலை 2025, 9:03 pm

நமது சிறப்பு நிருபர்

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு விரைவில் கூடி முடிவெடுக்கவுள்ளது. இந்த விவகாரத்தில் இம்மாத இறுதிக்குள்ளாக பாஜக தலைமை முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாஜகவின் அமைப்பு ரீதியாக உள்ள 37 மாநிலங்களில் உள்கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன. அவை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பாஜக மேலிட வட்டாரங்களில் விசாரித்தபோது, "கட்சி சட்டவிதிகளின்படி தேசியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்குவதற்கு முன்பு, 37 அமைப்பு ரீதியிலான மாநிலங்களில் குறைந்தபட்சம் 19 மாநிலங்களிலாவது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஜூலை 1-ஆம் தேதிக்குள்ளாக முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குறித்த காலத்துக்கும் மேலாக இப்பணிகள் நீடிப்பதால் தேர்வு நடைமுறையில் சில தளர்வுகளைக் கடைப்பிடிக்க பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது' என்றன.

பாஜக விதிகளின்படி கட்சியின் பாதி அமைப்புகளில் தேர்தல்கள் நடத்தப்பட்ட பிறகு மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில், குறைந்தபட்சம் பாதி மாநிலங்களிலாவது மாநிலத்தலைமை தேர்வு அல்லது நியமனங்கள் நடந்தால்தான் அகில இந்திய தலைவரைத் தேர்வு செய்ய முடியும்.

ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் அதிகாரபூர்வமாக 2023 ஜனவரியில் முடிவடைந்தது. 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவரது பதவிக் காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் புதிய தலைமை தேர்வாகும் வரை அவரே பதவியில் நீடித்து வருகிறார்.

"இத்தகைய சூழலில், கட்சிக்கும் ஆட்சிக்கும் இணைப்புப் பாலமாக விளங்கும் ஜெ.பி. நட்டாவுக்கே மறுவாய்ப்பு வழங்குவது குறித்து பாஜக மேலிடம் ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக விரைவில் பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூடி விவாதிக்கவுள்ளது.

அதில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் போனால் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் கிடைப்பார்' என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.