அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானம் 900 அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி கீழே வந்துள்ளது.
எனினும், விமானிகள் மீண்டும் விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளில் மேலே பறக்க முடியாமல் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 241 பயணிகள் பலியாகினர்.
இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், அந்த விபத்து நடந்து 38 மணிநேரத்தில் அதேபோன்ற மற்றொரு விபத்து தவிர்க்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ஏஐ 187 விமானம்
ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 2.56 மணிக்கு தில்லியில் இருந்து வியன்னா நோக்கி ஏர் இந்தியாவின் ஏஐ 187 விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் 900 அடி உயரத்தை எட்டியவுடன் திடீரென்று தரையை நோக்கி கீழே வந்ததற்கான ஜிபிடபள்யூஎஸ் எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.
இருப்பினும் விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்த விமானிகள், வியன்னாவை நோக்கி பயணம் செய்து பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்புத் துறைத் தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை முடியும் வரை ஏஐ 187 விமானத்தை இயக்கிய இரு விமானிகளும் விமானங்களை இயக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
Summary
Another Air India plane has dropped from 900 feet towards the ground in the 38 hours since the Ahmedabad crash. However, the pilots have regained control of the plane, according to a report.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!

இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!

2 ஆவது நாளாக நேபாளம் செல்ல முடியாமல் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்! பயணிகள் போராட்டம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


