சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஜம்மு - காஷ்மீர் சிஆர்பிஎஃப் முகாமில் சிறுத்தைத் தாக்குதல்! வீரர் ஒருவர் படுகாயம்!

பாதுகாப்புப் படை முகாமில் புகுந்த சிறுத்தைத் தாக்கியதில் வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்...

News image
சிறுத்தை (கோப்புப் படம்)
Updated On :24 டிசம்பர் 2025, 12:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் காவல் படையின் முகாமினுள் புகுந்த சிறுத்தைத் தாக்கியதில், அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆனந்த்நாக் மாவட்டத்தின், கப்ரான் மத்திய ரிசர்வ் காவல் படை முகாமுக்குள், இன்று (டிச. 24) சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனால், அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை உருவானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முகாமில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் சிலரை அந்தச் சிறுத்தைத் தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காவல் அதிகாரி கம்லேஷ் குமார் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில், படுகாயமடைந்த வீரர் கம்லேஷ் குமாருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, உள்ளூர் சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மீண்டும் முகாமுக்குத் திரும்பியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், தப்பித்து ஓடிய சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

summary

In Jammu and Kashmir's Anantnag district, an officer was seriously injured when a leopard entered a CRPF camp and attacked him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.