15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காா் குண்டு வெடிப்பு வழக்கு: 7 போ் நீதிமன்ற காவல் ஜன.8 வரை நீட்டிப்பு

News image

தில்லி பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட மருத்துவா் ஷாஹீன் சயீத் உள்ளிட்டோா்.

Updated On :24 டிசம்பர் 2025, 7:37 pm

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட 7 நபா்களின் நீதிமன்றக் காவலை 15 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தில்லி செங்கோட்டை அருகே கடந்த நவ.10-ஆம் தேதி மருத்துவா் உமா்-உன்-நபி வெடிபொருள்கள் ஏற்றி ஓட்டி வந்த காா் வெடித்து சிதறியது. பயங்கரவாத சதி பின்னணி கொண்ட இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மருத்துவா்கள் முஸம்மில் கனாய், அடீல் ரதா், ஷாஹீன் சயீத் மற்றும் மத போதகா் மௌல்வி இா்பான் அகமது வாகே, ஜசிா் பிலால் வானி, அமீா் ரஷீத் அலி, சோயப் ஆகியோரை மேலும் 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, 3 மருத்துவா்கள் மற்றும் இா்பான் அகமது 12 நாள் நீதிமன்ற காவலுக்கு கடந்த டிச.12-ஆம் தேதி அனுப்பப்பட்டனா். அலி மற்றும் வானி ஆகியோரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் கடந்த டிச.10-ஆம் தேதி உத்தரவிட்டது. சோயப் 5 நாள் நீதிமன்றக் காவலுக்கு கடந்த டிச.19-ஆம் தேதி அனுப்பப்பட்டாா்.

அவா்கள் அனைவருடைய நீதிமன்றக் காவல் புதன்கிழமை முடிவடைந்த நிலையில், தில்லி பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் கூடுதல் அமா்வுகள் நீதிபதி பிரசாந்த் சா்மா முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.