18 Dec, 2025 Thursday, 08:56 AM
The New Indian Express Group
இந்தியா
Text

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறி தந்தை கண்முன்னே பலி!

PremiumPremium

ராஜஸ்தானில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் மூச்சுத் திணறி பலி

Rocket

பிரதிப் படம்

Published On14 Dec 2025 , 6:31 AM
Updated On14 Dec 2025 , 6:31 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Sakthivel

ராஜஸ்தானில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் மூச்சுத் திணறி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், குழந்தையை ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குழந்தையின் பெற்றோரை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு குழந்தையின் தந்தை அழைத்துச் சென்றார். ஆம்புலன்ஸில் செவிலியர்கள் யாரும் உடன்செல்லாத நிலையில், செல்லும் வழியிலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் தீர்ந்து, குழந்தை மயக்கமான நிலையில், பஹ்சி நகரில் உள்ள ஓர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.

இருப்பினும், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலைமறைவாகி விட்டார்.

ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததாலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாகக் குழந்தையின் தந்தை குற்றம் சாட்டிய போதிலும், சம்பவம் தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

Rajasthan: Newborn dies in ambulance due to ‘oxygen shortage

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023