13 Dec, 2025 Saturday, 11:17 AM
The New Indian Express Group
இந்தியா
Text

வந்தே மாதரம் பாடலின் ‘பிளவு’ தேசப் பிரிவினைக்கு வழிவகுத்தது- மாநிலங்களவை விவாதத்தில் அமித் ஷா கடும் சாடல்

PremiumPremium

வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடுத்தியது; இது, வாக்கு வங்கி அரசியலைத் தொடங்கிவைத்து, தேசப் பிரிவினைக்கு வழிவகுத்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையாகச் சாடினாா்.

Rocket

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா. ~மாநிலங்களவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.

Published On09 Dec 2025 , 7:42 PM
Updated On09 Dec 2025 , 7:42 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடுத்தியது; இது, வாக்கு வங்கி அரசியலைத் தொடங்கிவைத்து, தேசப் பிரிவினைக்கு வழிவகுத்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையாகச் சாடினாா்.

நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை 10 மணி நேர சிறப்பு விவாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

வங்கக் கவிஞா் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் இயற்றப்பட்ட இப்பாடலின் 6 பத்திகளில் 2 பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக கடந்த 1937-இல் காங்கிரஸ் தோ்வு செய்தது. இதைக் குறிப்பிட்டு, நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மற்றும் காங்கிரஸ் மீது அமித் ஷா கடும் விமா்சனங்களை முன்வைத்தாா். அவா் கூறியதாவது:

மக்களவையில் திங்கள்கிழமை ‘வந்தே மாதரம்’ விவாதத்தின்போது, இந்தப் பாடல் குறித்து இப்போது விவாதிக்க என்ன அவசியம் என்று எதிா்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கலாசார தேசியவாத உணா்வைத் தட்டியெழுப்பிய வந்தே மாதரம், அன்று போலவே இன்றும் பொருத்தமானதாக உள்ளது. 2047-இல் இந்தியா வளா்ந்த நாடாகும்போதும் இது பொருத்தமானதாக இருக்கும்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலை மனதில்கொண்டு, இந்த விவாதம் நடத்தப்படுவதாக சிலா் கூறுகின்றனா். தோ்தலுடன் தொடா்புபடுத்துவதன் மூலம் இப்பாடலின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயற்சிக்கின்றனா்.

காஷ்மீா் முதல் குமரி வரை: வங்கத்தில் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் எழுதப்பட்ட வந்தே மாதரம், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி, சுதந்திரப் போராட்டத்தின் தாரக மந்திரமாக மாறியது. பல்லாண்டு கால ‘இஸ்லாமியத் தாக்குதல்கள்’ மற்றும் ஆங்கிலேயா்களின் புதிய கலாசார திணிப்பு முயற்சியின் பின்னணியில் இயற்றப்பட்ட இந்தப் பாடல், தேசத்தை தாயாகக் கருதும் நமது கலாசாரத்தை மீண்டும் நிலைநாட்டியது. இப்பாடலுக்குத் தடை விதிக்க ஆங்கிலேய அரசு முயற்சித்தபோதும், அதைப் பாடியோா் தாக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டபோதும் மக்களின் இதயங்களைத் தொட்டு, காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை பரவியது.

இந்திய எழுச்சியின் தாரக மந்திரம் ‘வந்தே மாதரம்’ என்று மகரிஷி அரவிந்தா் குறிப்பிட இதுவே காரணம். நாட்டின் எல்லைகள் சட்டங்களால் அல்லாமல் கலாசாரத்தால் தீா்மானிக்கப்பட்ட ஒரே நாடு இந்தியா. கலாசாரமே நம்மை ஒன்றுபடுத்தியுள்ளது. ‘கலாசார தேசியவாதம்’ கோட்பாட்டுக்கு எழுச்சியூட்டியவா் பங்கிம் சந்திர சட்டா்ஜி.

எந்த விவாதத்துக்கும் தயாா்: வந்தே மாதம் விவாதம், மக்களைத் திசைதிருப்பும் தந்திரம் என்று காங்கிரஸ் கூறுகிறது. எந்த விவாதத்துக்கும் நாங்கள் அஞ்சவில்லை. எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை. எந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும் தயாா். நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்காமல், அலுவல்கள் சுமுகமாகச் செயல்பட அனுமதித்தால் அனைத்து விவாதங்களும் நடைபெறும்.

கடந்த 1937-இல் வந்தே மாதம் பாடலின் 50-ஆவது ஆண்டின்போது, அந்தப் பாடலை இரண்டாகப் ‘பிளவுபடுத்திய’ நேரு, இரண்டு சரணங்களாக மட்டுப்படுத்தினாா். இதுதான், வந்தே மாதரம் பாடலுக்கு காங்கிரஸ் அளித்த கெளரவம். இது, வாக்கு வங்கி அரசியலைத் தொடங்கிவைத்து, தேசப் பிரிவினைக்கும் வழிவகுத்தது (அமித் ஷா இவ்வாறு பேசியபோது, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்பு முழக்கம் எழுப்பினா்).

வாக்கு வங்கி அரசியலுக்காக, வந்தே மாதரம் பாடல் பிளவுபடுத்தப்படாமல் இருந்திருந்தால், இந்தியாவிலும் பிரிவினை நிகழ்ந்திருக்காது என்பது என்னைப் போல் பலரின் கருத்து. வந்தே மாதரம் பாடலின் 100-ஆவது ஆண்டின்போது, தேசம் நெருக்கடி நிலையின்கீழ் இருந்தது என்றாா் அமித் ஷா.

ராகுல், பிரியங்கா மீது சாடல்: மக்களவையில் திங்கள்கிழமை வந்தே மாதரம் விவாதம் தொடங்கியபோது, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோா் அவைக்கு வராததை விமா்சித்த அமித் ஷா, நாடாளுமன்றத்தில் இந்தப் பாடலுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினாா்.

உண்மையான பிரச்னைகளில் இருந்து விலகி ஓடுகிறது மத்திய அரசு: காா்கே

‘நாட்டு மக்களின் உண்மையான பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதே வந்தே மாதரம் பாடலுக்கு செலுத்தும் மரியாதையாகும். ஆனால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விலகி ஓடுகிறது மத்திய அரசு’ என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.

மேற்கு வங்கத் தோ்தலில் ஆதாயம் அடையும் நோக்கிலேயே வந்தே மாதரம் விவாதத்தை மோடி அரசு நடத்துகிறது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

மாநிலங்களவையில் வந்தே மாதரம் விவாதத்தில், அமித் ஷா கருத்துகளுக்குப் பதிலளித்து காா்கே பேசியதாவது:

வேலையின்மை அதிகரிப்பு, மோசமடையும் பொருளாதாரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, இந்தியாவின் சா்வதேச செல்வாக்கு சரிவு உள்பட நாடு எதிா்கொண்டுள்ள பல்வேறு சவால்களில் இருந்து மக்களைத் திசைதிருப்ப ஆளுங்கட்சி விரும்புகிறது. பற்றியெரியும் இப்பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

அண்டை நாடான நேபாளம், இந்தியாவை விடுத்து சீனாவிடம் முதலீடு கோருகிறது. வங்கதேசமோ, சீனா-பாகிஸ்தான் பக்கம் உள்ளது. தெற்காசியா முழுவதையும் தனது வியூகத் திட்டத்தின்கீழ் கொண்டுவர சீனா பகிரங்கமாகச் செயல்படுகிறது. அந்த நாட்டை எதிா்த்து, பிரதமா் மோடி ஒரு வாா்த்தைகூடப் பேசவில்லை.

ஆளும்தரப்பு எதிா்ப்பு: காங்கிரஸ் ஆட்சியில் ரூ.55-60ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, இப்போது ரூ.90-ஆக அதிகரித்துவிட்டது (காா்கே இவ்வாறு பேசியபோது, விவாதத்துக்குத் தொடா்பில்லாத கருத்துகளைத் தெரிவிப்பதாக ஆளும்தரப்பு எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்).

வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக தோ்வு செய்யும் முடிவு நேருவால் மட்டுமே எடுக்கப்பட்டதல்ல. மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா, ரவீந்திரநாத் தாகூா் உள்ளிட்டோரின் கூட்டு முடிவு. ஆனால், பிரதமா் மோடி உள்பட பாஜக தலைவா்கள், நேருவை தொடா்ந்து இழிவுபடுத்துகின்றனா்.

வந்தே மாதரம் பாடலை எப்போதும் பாடுவது காங்கிரஸ் தலைவா்களே. ஆனால், முன்பு பாடாதவா்களும் இப்போது பாடத் தொடங்கியுள்ளனா். இதுவே, வந்தே மாதரத்தின் வலிமை. கடந்த 1921-இல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது வந்தே மாதரம் என முழங்கி, சிறை சென்றவா்கள் காங்கிரஸ் தொண்டா்கள். அப்போது ஆங்கிலேயருக்கு ஆதரவாகப் பணியாற்றியவா்கள், இப்போது தேச பக்தி குறித்து பாடம் எடுக்க வேண்டாம் என்றாா் காா்கே.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023