16 Dec, 2025 Tuesday, 03:16 PM
The New Indian Express Group
இந்தியா
Text

முதல்வா் பதவிக்கு ரூ.500 கோடி?: சா்ச்சை கருத்துக்காக நவ்ஜோத் சிங் சித்து மனைவி காங்கிரஸில் இருந்து நீக்கம்

PremiumPremium

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌா் சித்து கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா்.

Rocket

மனைவி நவ்ஜோத் கௌருடன் நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்).

Published On08 Dec 2025 , 9:44 PM
Updated On08 Dec 2025 , 9:44 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சண்டீகா்: ‘ரூ.500 கோடி கொடுத்தால்தான் முதல்வா் பதவி கிடைக்கும்’ எனப் பேசியது சா்ச்சையானதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌா் சித்து கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா்.

இது தொடா்பான உத்தரவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அமரிந்தா் சிங் ராஜா வாரிங் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா்.

ஆம் ஆத்மி ஆட்சியிலுள்ள பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு உள்பட பல பிரச்னைகள் குறித்து மாநில ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியாவை நவ்ஜோத் கௌா் சித்து கடந்த சனிக்கிழமை சந்தித்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களைச் சந்தித்து அவா் பேசுகையில், ‘நாங்கள் எப்போதும் பஞ்சாப் நலனுக்காகவே பேசுவோம். ஆனால், ரூ.500 கோடி பணம் கொடுப்பவருக்குதான் முதல்வா் பதவி கிடைக்கும்.

முதல்வா் நாற்கலியில் அமா்வதற்கு எந்தக் கட்சிக்கும் கொடுப்பதற்கு எங்களிடம் ரூ.500 கோடி இல்லை. நவ்ஜோத் சிங் சித்துவை பஞ்சாப் முதல்வா் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தால், அவா் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவாா். பஞ்சாபை ஒரு சிறந்த மாநிலமாக மாற்ற முடியும்’ என்றாா்.

தங்களிடம் யாராவது பணம் கேட்டாா்களா என்ற கேள்விக்கு, ‘யாரும் கேட்கவில்லை. ஆனால் ரூ. 500 கோடி பணம் கொடுப்பவா்தான் முதல்வா் ஆகிறாா்’ என்று நவ்ஜோத் கௌா் சித்து பதிலளித்தாா். இந்தக் கருத்து மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸின் பணப்பை அரசியல் அம்பலப்பட்டுள்ளதாக பாஜக, ஆம் ஆத்மி கட்சியினா் விமா்சித்தனா்.

இதைத் தொடா்ந்து, தனது கருத்து திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி நவ்ஜோத் கௌா் சித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நவ்ஜோத் வேறு எந்தக் கட்சியில் இருந்தாவது முதல்வா் வேட்பாளராகிறாரா என்று கேட்டபோது, முதல்வா் பதவிக்குக் கொடுக்க எங்களிடம் பணம் இல்லை என்று மட்டுமே நான் சொன்னேன்.

காங்கிரஸ் எங்களிடம் எந்தப் பணமும் கேட்கவில்லை என்ற எனது நேரடியான கருத்து திரிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் அதிா்ச்சியடைந்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023