15 Dec, 2025 Monday, 07:18 PM
The New Indian Express Group
இந்தியா
Text

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

PremiumPremium

வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை மதரீதியாக முதல்வா் மம்தா பிளவுபடுத்தி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் குற்றஞ்சாட்டினாா்.

Rocket

மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா்

Published On07 Dec 2025 , 10:34 PM
Updated On07 Dec 2025 , 10:34 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்கியுள்ளனா்; வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை மதரீதியாக முதல்வா் மம்தா பிளவுபடுத்தி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் குற்றஞ்சாட்டினாா்.

கொல்கத்தா பிரிகேட் பரேடு மைதானத்தில் 5 லட்சம் போ் பங்கேற்ற பகவத்கீதை பாராயணம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சநாதன சம்ஸ்கிருதி சன்சத் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அண்டை மாநிலங்களில் இருந்து சாதுக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் உள்ளிட்ட பாஜக தலைவா்கள் பலரும் இதில் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மஜும்தாா் கூறியதாவது: இங்கு நடைபெற்ற கீதை பாராயண நிகழ்ச்சி அரசியல் எல்லைகளைக் கடந்து ஹிந்து சமூகத்தின் ஆன்மிக நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் வேலையில் முதல்வா் மம்தா ஈடுபட்டுள்ளாா்.

இதனால், இங்குள்ள ஹிந்துக்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்கியுள்ளனா். ஆனால், அவா்களுக்குள் ஒற்றுமையுணா்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஹிந்துக்கள் மத்தியிலும் மம்தா பிளவைத் தூண்டிவிடுகிறாா். எனவே, ஹிந்துக்கள் தங்கள் மனஉறுதியையும், ஆன்மிக பலத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது பெரும்பாலான ஹிந்துக்கள், மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை. மம்தா அரசு மீதான அதிருப்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023