15 Dec, 2025 Monday, 09:45 PM
The New Indian Express Group
இந்தியா
Text

மக்களவையில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் தீபம்! டி.ஆர். பாலு - எல் முருகன் இடையே வாதம்

PremiumPremium

மக்களவையில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து டி.ஆர். பாலு - எல் முருகன் இடையே வாதம் நடைபெற்றது.

Rocket

டி.ஆர். பாலு

Published On05 Dec 2025 , 8:29 AM
Updated On05 Dec 2025 , 8:29 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Vanisri

மக்களவையில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து இன்று கேள்வி நேரத்தின்போது திமுக எம்.பி. டி.ஆர். பாலு முக்கிய வாதத்தை முன் வைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி. எல் முருகனும் பேசினார்.

கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி. டி.ஆர். பாலு, தமிழகத்தில் கடந்த ஒரு சில நாள்களாக பிரச்னை எழுந்துள்ளது. அதன் காரணமாக அமைதியற்ற நிலை உருவாகியிருப்பதால் அதனை இங்கே கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மதுரையில் அமைந்துள்ள சுப்பிரமணியம் சுவாமி கோயிலான திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்கும் தீபத் தூணில் யார் தீபம் ஏற்றுவது என்பதே அந்த சர்ச்சை.

அதாவது, தீபத் தூணில் அரசு அங்கீகாரம் பெற்ற அறநிலையத் துறை அதிகாரிகளால், அந்த தீபம் ஏற்றப்படவேண்டுமா? அல்லது யாராவது அப்பகுதியில் வாழும் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் அந்த தீபத்தை ஏற்ற வேண்டுமா? என்பதே. அது. அது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி, தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நீதிபதி மூலமாக உத்தரவையும் பெற்றுவிட்டார்கள் என்று கூறினார்.

டி.ஆர். பாலு, நீதிபதியை ஆர்எஸ்எஸ் என்று அழைத்ததற்கு பாஜக உள்ளிட்ட எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாடாளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும், சட்டத் துறையினர் குறித்து இவ்வாறு பேசக் கூடாது என்றும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இது நீதித்துறை தொடர்பான விவகாரம். அது மட்டுமல்லாமல் நீதிபதி குறித்துப் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று அவைத் தலைவர் கூறி, டி.ஆர். பாலுவை பேச அனுமதித்தார். தொடர்ந்து பேசிய டி.ஆர். பாலு, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுமாறு நீதிபதி பிறப்பித்த தீர்ப்பையும் டி.ஆர். பாலு வாசித்துக் காட்டினார். இது குறித்து நாடாளுமன்ற கவனத்துக்குக் கொண்டு வர விரும்புவதாகவும் அங்கு, மதக் கலவரம் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இரு மதத்தினர் இடையே வன்முறை நிகழும் ஆபத்து இருப்பதாகவும் டி.ஆர். பாலு கூறினார்.

இது குறித்து பாஜக எம்.பி. எல். முருகன் பேசுகையில், தமிழகத்தின், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அங்கு மக்களின் உரிமையை நிலை நாட்ட அரசு மறுத்துவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசும் காவல்துறையும் மதிக்காமல் தீபம் ஏற்றச் சென்ற மக்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட பிறகு, பாதுகாப்பு வீரர்களுடன் சென்று திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றச் சொன்னார்கள். ஆனால், தீபம் ஏற்ற விடாமல் தடுத்து, அங்குச் சென்றவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். அராஜகப் போக்கை திமுக அரசு அரங்கேற்றியிருக்கிறது. அங்குள்ள காவல்துறையும் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023