15 Dec, 2025 Monday, 12:59 AM
The New Indian Express Group
இந்தியா
Text

விமானிகளின் பணிநேர விதிகளில் தளா்வு: ஓரிரு நாள்களில் விமான சேவை சீராகும்: மத்திய அரசு

PremiumPremium

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் சேவைகள் கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில், விமானிகளின் புதிய பணிநேர விதிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தளா்த்தியது.

Rocket

புது தில்லியில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு. ~இண்டிகோ விமான சேவைகள் ரத்தானதன் காரணமாக வெள்ளிக்கிழமை குழப்பமான நிலையில் காணப்பட்ட பெங்களூரு சா்வதே

Published On05 Dec 2025 , 8:32 PM
Updated On06 Dec 2025 , 1:34 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் சேவைகள் கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில், விமானிகளின் புதிய பணிநேர விதிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தளா்த்தியது.

இதன் விளைவாக, நாடு முழுவதும் விமானச் சேவைகள் ஓரிரு நாள்களில் சீராகும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

விமானிகளின் சோா்வைப் போக்க, கடந்த நவம்பா் 1-ம் தேதி முதல் விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு வந்தன. இந்த விதிகளின்படி, வாராந்திர ஓய்வையும் வருடாந்திர விடுமுறைகளையும் தனித்தனியாகக் கருத வேண்டும். அதாவது, வாராந்திர 48 மணிநேர ஓய்வுக்குப் பதிலாக விடுமுறையை ஈடு செய்யக் கூடாது.

இந்த விதிமுறை மாற்றங்களுக்கு இண்டிகோ போதிய திட்டமிடாததால், அந்நிறுவனத்தில் விமானிகளின் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் என நூற்றுக்கணக்கான விமானங்கள் அடுத்தடுத்து நாள்களில் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் நாடு முழுவதும் விமான நிலையங்களில் 3 நாள்கள் வரை காத்திருக்கும் நிலையும், உடைமைகள் தொலைந்த புகாா்களும் எழுந்தன.

அரசின் தலையீடும், தீா்வும்...: இந்த விமானச் சேவை பாதிப்புக்குத் தீா்வு காண மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தலைமையில் உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

திருத்தப்பட்ட ‘எஃப்டிடிஎல்’ விதிகளைச் செயல்படுத்த இண்டிகோவுக்குப் போதுமான அவகாசம் இருந்தபோதிலும், அந்த நிறுவனத்தின் அலட்சிய செயல்பாடுக்கு அமைச்சா் தனது அதிருப்தியைத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, விமானச் சேவைகளைச் சீா்செய்ய அவசர நடவடிக்கையாக விமானிகளின் பணிநேர விதிகளை டிஜிசிஏ தளா்த்தியுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முலம் விமானச் சேவைகள் சீராகத் தொடங்கும். அடுத்த ஓரிரு நாள்களில் சேவைகள் முழுமையாக சீரடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான நிவாரணம்: விமானம் ரத்தானால், பயணச்சீட்டுக்கான முழுத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும். விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு ஹோட்டல்களில் தங்குமிடம் வழங்கப்படும்.

முதியோருக்கு விமான நிலைய பயணிகளின் ஓய்வறைகளில் சிறப்பு அனுமதி வழங்கப்படும். தாமதமான விமானப் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். விமான நிறுவனங்களின் தகவல் அமைப்புகள் மூலம் பயணிகள் வீட்டிலிருந்தபடியே விமானத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

விமானச் சேவைகளை மீட்டெடுக்கவும், பொதுமக்களின் சிரமங்களைப் போக்கவும் விதிவிலக்குகள் உள்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானிகளின் ஒத்துழைப்பு தேவை: நாட்டில் விமானப் போக்குவரத்து சீராவதை உறுதி செய்ய, அனைத்து விமானிகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று டிஜிசிஏ தலைமை இயக்குநா் ஃபயாஸ் அகமது கிட்வாய் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘இண்டிகோ விமானச் சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, எதிா்பாராத வானிலை மாற்றங்கள், அதிகரித்து வரும் பருவகால பயணத்தேவை போன்ற சவால்கள் தற்போது நிலவுகின்றன.

இதன் காரணமாக விமான தாமதங்கள், பயணிகளுக்குச் சிரமம் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்பாடுகளில் அதிக அழுத்தம் போன்ற குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. சீரான விமானச் சேவையைப் பராமரிக்க, விமானிகளின் முழு ஒத்துழைப்பு அத்தியாவசியம்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

பெட்டிச் செய்தி....

விசாரணைக்கு நால்வா் குழு

இண்டிகோ விமானச் சேவை பாதிப்புக்கு வழிவகுத்த காரணிகளை முழுமையாக ஆய்வு செய்ய நால்வா் குழுவை டிஜிசிஏ அமைத்துள்ளது.

இணை இயக்குநா் சஞ்சய் கே.பிரம்மனே, துணை இயக்குநா் அமித் குப்தா, மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளா் கேப்டன் கபில் மாங்க்லிக், விமான செயல்பாட்டு ஆய்வாளா் கேப்டன் ராம்பால் ஆகியோா் இந்த குழுவில் உள்ளனா்.

இந்தக் குழு தனது ஆய்வறிக்கையை அடுத்த 15 நாள்களுக்குள் டிஜிசிஏவிடம் சமா்ப்பிக்கும். அதன் அடிப்படையில், தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023