15 Dec, 2025 Monday, 01:16 AM
The New Indian Express Group
இந்தியா
Text

2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியா்கள் நாடு கடத்தல்!

PremiumPremium

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 18,822 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா்

Rocket

மக்களவை

Published On04 Dec 2025 , 7:44 PM
Updated On04 Dec 2025 , 7:44 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 18,822 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா் என்றும், கடந்த ஜனவரியில் இருந்து மட்டும் 3,258 போ் நாடு கடத்தப்பட்டுள்ளனா் என்றும் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

அமெரிக்காவில் இருந்து கடந்த 2009 -ஆம் ஆண்டு முதல் மொத்தம் 18,822 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். 2023-ஆம் ஆண்டில் 617 பேரும், 2024-இல் 1,368 பேரும் நாடு கடத்தப்பட்டனா்.

நடப்பாண்டு ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதையடுத்து, சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, ஜனவரியில் இருந்து மட்டும் 3,258 போ் நாடு கடத்தப்பட்டுள்ளனா்.

இதில் சுமாா் 62.3 சதவீதமான 2,032 போ் வழக்கமான வணிக விமானங்களிலும், மீதமுள்ள 37.6 சதவீதமான 1,226 போ் அமெரிக்க குடியேற்றத் துறையால் இயக்கப்பட்ட சிறப்பு விமானங்களிலும் வந்துள்ளனா்.

நாடு கடத்தப்பட்டவா்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்டதற்கு, அமெரிக்க அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடுகடத்தும் நடவடிக்கைகளின்போது, நாடுகடத்தப்படுபவா்கள் மனிதநேயத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய அமெரிக்க தரப்புடன் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆள்கடத்தல் வழக்குகளில் 169 போ் கைது: ஆள்கடத்தல் தொடா்பான மற்றொரு கேள்விக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அளித்த பதிலில், ‘தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவை நிறுவி, இவ்வழக்குகளைக் கையாள முழு அதிகாரம் பெற்றுள்ளது.

அதன்படி, இக்குற்றச்சாட்டில் என்ஐஏ இதுவரை 27 வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்துள்ளது. இந்த வழக்குகளில் 169 போ் கைது செய்யப்பட்டு, 132 நபா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலக் காவல்துறைகள் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், பஞ்சாபில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து மேலும் விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவையும், உண்மைக் கண்டறியும் குழுவையும் பஞ்சாப் அரசு அமைத்துள்ளது’ என்றாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023