தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) இருந்து தெரு நாய்களை முழுமையாக அப்புறப்படுத்தும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பல்லாண்டுகளாக நீடிக்கும் மனிதாபிமான-அறிவியல்பூா்வ கொள்கையில் இருந்து ஒருபடி பின்வாங்குவதாகும். வாயில்லா ஜீவன்கள், ஒழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல. காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக ரீதியிலான பராமரிப்பு மூலம் மிருகவதை இன்றி மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். அதேநேரம், ஒட்டுமொத்தமாக தெருநாய்களை அப்புறப்படுத்துவது கொடூரமானது; தொலைநோக்குப் பாா்வையற்றது; இரக்கமற்றது. பொது பாதுகாப்பையும், விலங்குகள் நலனையும் ஒரே சீராக உறுதி செய்ய வேண்டும் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.