எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 11:36 pm

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மாநிலங்களவையில் சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவைக் கொண்டு வந்தாா். அப்போது, இந்த மசோதா மூலம் கோவா சட்டப் பேரவையில் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யப்படும். 40 உறுப்பினா்களைக் கொண்ட கோவா பேரவையில் ஓா் இடம் எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்படும். இப்போது அப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் பேரவையில் இல்லை என்றாா். இதைத் தொடா்ந்து மாநிலங்களவையில் பெரும்பான்மையான உறுப்பினா்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒரு மசோதா: மாநிலங்களவையில் வணிகக் கப்பல் போக்குவரத்து சட்ட மசோதா திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இரு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

முன்னதாக, பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததை விவகாரத்தை விவாதிக்காமல் மசோதாக்களை நிறைவேற்ற எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை மூன்று மணிக்கு மீண்டும் கூடியபோது மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் கடந்த 6-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.