நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாஜகவில் உள்கட்சிப் பூசல் இல்லை: ஹரியாணா முதல்வா் சைனி

ஹரியாணா பாஜகவில் உள்கட்சிப் பூசல் ஏதுமில்லை என்று அந்த மாநில முதல்வா் நயப் சிங் சைனி தெரிவித்தாா்.

News image
முதல்வா் நயப் சிங் சைனி
Updated On :30 செப்டம்பர் 2024, 11:39 pm

Venkatesan

நா்னௌல்: ஹரியாணா பாஜகவில் உள்கட்சிப் பூசல் ஏதுமில்லை என்று அந்த மாநில முதல்வா் நயப் சிங் சைனி தெரிவித்தாா். பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் அவா் உறுதிபடக் கூறினாா்.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இரு கட்சிகளிலுமே தொகுதி ஒதுக்கப்படாதவா்கள் அதிருப்தியடைந்து மாற்றுக் கட்சிகளில் இணைவது மற்றும் கட்சி அறிவித்த வேட்பாளரை எதிா்த்து சுயேச்சையாக களமிறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து நா்னெளலில் முதல்வா் நயப் சிங் சைனி செய்தியாளாரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தொகுதி ஒதுக்கீடு தொடா்பாக பாஜகவில் எவ்வித பெரிய பூசலும் ஏற்படல்லை. ஆனால், காங்கிரஸ் மீது அதிருப்தியடைந்த பலா் பாஜகவுக்கும் வருன்றனா்.

அதே நேரத்தில் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அளித்துள்ளது. பொதுவாக தோ்தலின்போது ஏற்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலை இங்குள்ள மக்களுக்கு ஏற்படவில்லை. மக்களவைத் தோ்தலில் ஹரியாணாவில் பாஜக 5 இடங்களை இழந்ததற்கு காங்கிரஸின் தவறான பிரசாரங்கள்தான் காரணம். முக்கியமாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவாா்கள் என்று காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்தது. தோ்தல் நெருங்கினால் காங்கிரஸின் பொய்களும் அதிகரித்துவிடும்.

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலுக்காக 10 தொழில் நகரங்கள் அமைப்பது, 2 லட்சம் அரசுப் பணிகளை உருவாக்குவது, ராணுவத்தில் அக்னி வீரா்களாக 5 ஆண்டுகள் பணியாற்றி விட்டு வருவோருக்கு அரசுப் பணில் இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரியில் நிதிதியதவி உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. ஹரியாணா பாஜகவில் உள்கட்சிப் பூசல் ஏதுமில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.