ஹரியாணாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரின் ஹரியாணா சங்கல்ப யாத்திரையின் இரண்டாம் கட்டத்திற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியதோடு, இது அரசியல் சுற்றுலா என்றும் முதல்வர் சைனி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்த மூத்த தலைவரும் இதுவரை ஹரியாணாவில் பிரசாரம் செய்யவில்லை. தற்போது காந்தி அரசியல் சுற்றுலாவில் களமிறங்கியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் மாநிலத்தில் நாங்கள் செய்த வளர்ச்சியைப் பார்த்து அவர் வரவேற்கப்படுகிறார். இருப்பினும் பூபேந்தர் ஹூடாவின் ஆட்சிக் காலத்தில் பரவலாக இருந்த வாக்காளர்களிடமிருந்து அவர் கேள்விகளை எதிர்கொள்வார்.
ஹரியாணா தேர்தல் பிரசாரத்தின் இரண்டாம் கட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அம்பாலா மாவட்டத்தில் உள்ள நரேன்கர் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பாஜகவில் உள்கட்சி பூசல் இல்லை, கோஷ்டி பூசல் இல்லை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இது ஒரு ஜனநாயக கட்சி, யார் வேண்டுமானாலும் தங்கள் கோரிக்கையை எழுப்பலாம். பாஜவில் எந்த சண்டையும் இல்லை, இனிமேலும் எந்த சண்டையும் இருக்காது.
வாக்காளர்களிடையே எந்த குழப்பமும் இல்லை. பாஜகவிற்கு வாக்களிப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். நாங்கள் மாநிலத்தில் அபார வெற்றியைப் பெறுவோம். நான் அதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
மார்ச் மாதம் முதல்வராகப் பதவியேற்ற சைனி, லட்வா தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜகவில் பிளவு இல்லை ஆனால் காங்கிரஸில் பிளவு ஏற்படுவது நிச்சயம். அவர்களால் மூத்த தலைவர்களுக்குக் கூட மதிப்பளிக்க முடியாது. அப்படி இருக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மட்டும் எப்படி நிறைவேற்றப்போகிறார்கள். ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த பயங்கரவாதத்திற்கும் நாடு அடிபணியாது: ஹரியாணா முதல்வர்!

மீண்டும் சமக? தீர்ப்பை மாற்றுவாரா நாட்டாமை?

நக்ஸல்களை வேரறுக்க மோடி அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது: ஹரியாணா முதல்வா்

பாஜகவில் எங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை: கே.பி.ராமலிங்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


