மகாராஷ்டிரத்தில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அமாவாசைக்குப்பின் முடிவெடுக்கப்படும் என பாஜக தலைவர் ஹர்ஷவர்தன் பாட்டீல் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் இந்தாண்டு நவம்பர் 26-ம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், மாநில பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாநில பேரவைத் தேர்தலில் புணேவின் பாராமதி தாலுகாவில் உள்ள இந்தாபூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும், அதாவது பித்ரு பட்சம் நிறைவடைந்த பிறகு அறிவிக்கப்படும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட பாட்டீல் பெரும்பாலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பக்கம் மாறக்கூடும் என்றும் கடந்த சில நாள்காளாக ஊகங்களும் பரவி வருகின்றன.
கடந்த 1995, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்களில் பாட்டீல் இந்தாபூர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார். ஆனால் காங்கிரஸ் அந்த தொகுதியை தக்கவைத்தது. 2019ல் நடைபெற்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தத்தாத்ரே பார்னே 3,110 வாக்குகள் வித்தியாசத்தில் பாட்டீலை தோற்கடித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், கடந்த சில நாள்களாக எனது தொகுதியில் ஜனதா தர்பார் (பொது மக்கள் தொடர்பு) நடத்தி வருவதாகவும், வரும் பேரவைத் தேர்தலில் இந்தாபூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என பலர் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ஜனநாயகத்தில் மக்களின் கருத்தையே உயர்ந்ததாகக் கருதுவதால், நான் ஒரு முடிவு எடுக்க வேண்டும். "பித்ரு பட்சம் முடிந்ததும் முடிவு எடுப்பேன்" என்று அவர் கூறினார்.
இந்து நாள்காட்டியில் பித்ரு பட்சம் என்பது மகாளய அமாவாசையின் முதல் பதினைந்து நாளாகும். இந்த காலங்களில் புதிதாக எந்த காரியங்களைத் தொடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?
தேர்தலில் போட்டியிடாததில் அண்ணாமலைக்கு வருத்தம் இல்லை! பாஜக தேசிய தலைவர்

தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


