தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பணமோசடி வழக்கில் தெலங்கானா அமைச்சர் வீட்டில் சோதனை!

பணமோசடி வழக்கில் தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி வீட்டில் சோதனை..

News image

அமலாக்கத்துறை

Updated On :27 செப்டம்பர் 2024, 7:38 am

பணமோசடி வழக்கில் தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி மற்றும் மகன் பி.ஹர்ஷா ரெட்டி ஆகியோரின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அமைச்சரின் வீடு, நகரின் புறநகரில் உள்ள ஹிமாயத் சாகரில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் அவரது மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான பிற இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: வரம் தரும் வாரம்!

ஹர்ஷா ரெட்டிக்கு சொந்தமான கட்டுமான நிறுவன வளாகத்திலும், அவர்களது சொந்த மாவட்டமான கம்மத்தில் உள்ள மற்ற இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

பதினாறு குழுவினர் இணைந்து வீடு, அலுவலகங்கள் மற்றும் பிற வளாகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

ஹர்ஷா ரெட்டி ரூ.7 கோடி மதிப்புள்ள ஏழு விலையுயர்ந்த கடிகாரங்களை வாங்கியதாக வருவாய் புலனாய்வு இயக்குனகரம்(டிஆர்ஐ) அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழங்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.