15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கேஜரிவால் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடிப்பு: போலீஸார் வழக்குப் பதிவு!

பட்டாசு வெடித்தது தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு..

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 10:55 am

திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை வரவேற்க அவரது வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக தில்லி போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

கலால் கொள்கை வழக்கில் முதல்வர் கேஜரிவால் கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் அமலாக்கத்துறையின் இந்த வழக்கிலிருந்த விடுவித்ததைத் தொடர்ந்து சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரிய கேஜரிவாலின் மனு செப்.13ல் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை 155 நாளாக காவலில் வைப்பது சட்டவிரோதமானது என்று கோரி உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.

இதையடுத்து நேற்று மாலை திகார் சிறையிலிருந்து, தலைநகரின் சிவில் லைன்ஸில் உள்ள அவரது இல்லத்திற்கு வரும்போது அவரது ஆதரவாளர்களும், தெண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் கொண்டாடினர்.

தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகரில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குளிர்கால மாசைக் கட்டுப்படுத்த பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதித்து கடந்த திங்களன்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு உத்தரவை மீறியதாகவும், முதல்வரின் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.