ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சீக்கியர்களைப் பற்றி ஆபத்தான கருத்துகளை உருவாக்கும் ராகுல்: பாஜக

கடின உழைப்பு, நேர்மையுடன் அமெரிக்காவில் வாழ்க்கையை நடத்தி வரும் சீக்கியர்களின் மத்தியில் அவதூறு பரப்புகிறார் ராகுல்.

News image

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி - Center-Center-Delhi

Updated On :10 செப்டம்பர் 2024, 10:22 am

சீக்கிய சமூகம் குறித்து ஆபத்தான கருத்துகளைப் பரப்ப முயல்கிறார் ராகுல் காந்தி என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் மூன்று நாள் பயணமாக அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் உரையில் சீக்கிய சமூகம் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாகக் கண்டனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேசியதாவது,

ராகுல் காந்தியின் கருத்துகள் எதிரானவை. அவர் வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பொய்யான கருத்துகளைப் பரப்புகிறார்.

சீக்கியர்கள் தலைப்பாகை மற்றும் கடா அணிய முடியாது என்று அவர் கூறியுள்ள கடுமையான வார்த்தைகளை நான் கண்டிக்கிறேன் என்று சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் கூறினார்.

கடந்த 1984ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ராகுலின் குடும்பம் ஆட்சியில் இருக்கும்போது பாதுகாப்பின்மை, அச்சுறுத்தல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தியது.

1984ல் சீக்கிய சமூகத்திற்கு எதிராக ஒரு படுகொலை நடந்தது. இதில் 3 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, அவர்களைச் சுற்றி டயர்களை வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

நமது தேசிய அடையாளம் ஒற்றுமை. ஒற்றுமை மற்றும் வேற்றுமையின் வலிமை உள்ளடக்கிய உணர்வுப்பூர்வமான பிரச்னைகளை ராகுல் சமீப காலமாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் அமெரிக்காவில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு மத்தியில் ராகுல் தவறான கதைகளைப் பரப்ப முயல்கிறார் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.