கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, அது பற்றி யாரும் பேசுவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மமதா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் பேசிய மமதா பானர்ஜி, உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கப்படவில்லை, ஆனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை என்று, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு சம்பவங்கள் குறித்து பேசினார்.
மேலும், பாரதிய நியாய சன்ஹிதாவை, மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் கொண்டுவந்துள்ளது, தற்போதிருக்கும் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை புதிய சட்ட மசோதா கவனத்தில் கொண்டு திருத்தப்பட்டுள்ளது என்றும் மமதா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே டிரோன்: 3 பேர் கைது

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை

பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை



