தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்: பிரியங்கா காந்தி

பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பரப்புரை செய்துள்ளேன் முதன்முறையாக இப்போது எனக்காகப் பரப்புரை செய்கிறேன்.

News image

வயநாட்டில் பிரியங்கா உரை

Updated On :23 அக்டோபர் 2024, 7:34 am

வயநாடு தொகுதியில் இன்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், அங்கு நடைபெற்றுவரும் பிரசாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வயநாட்டில் முதல்முறையாக களம் காணும் பிரியங்கா

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறார். வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்ய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியில் உரை நிகழ்த்தினார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், பிரியங்கா காந்தியுடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாட்டின் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியும் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

பேரணியில் பிரியங்கா காந்தி பேசியதாவது,

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். கடந்த 35 ஆண்டுகளாகப் பிரசாரம் செய்து வருகிறேன். 17 வயதில் எனது தந்தைக்கு வாக்கு சேகரித்துள்ளேன்.

பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பரப்புரை செய்துள்ளேன் முதன்முறையாக இப்போது எனக்காகப் பரப்புரை செய்கிறேன்.

மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தில் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். இந்த பேரணியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வயநாட்டு மக்களான உங்களுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.