தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: சத்தீஸ்கர் முதல்வர்!

அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது..

News image

முதல்வர் விஷ்ணு தியோ சாய்

Updated On :16 அக்டோபர் 2024, 6:33 am

சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு சத்தீஸ்கரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3.9 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், இந்த உயர்வு இந்தாண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதம், மகாராஷ்டிர அரசு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 46 சதவீதமாகக் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு மேலும் 4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.