நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தில்லியில் 122 டிகிரி வெயில் கொளுத்தும்: வானிலை மையம் கொடுத்த அதிர்ச்சி

தலைநகர் புதுதில்லியில் 122 டிகிரி வெயில் கொளுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News image
கோடை வெப்பம்
Updated On :29 மே 2024, 9:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லிக்கு இப்போதைக்கு மழையெல்லாம் கிடையாது, ஆனால், வெயில் பதிவாகி, பல புதிய சாதனைகள் மழையாகப் பொழியும் என்றும், தில்லியில் 122 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.

கோடை வெப்பம்

கோடை வெப்பம்

கேரளம், தமிழகம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மழைப்பொழிவு ஆங்காங்கே பதிவான நிலையில், தலைநகர் புதுதில்லி உள்பட வட மாநிலங்களில் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வந்தது.

இந்த நிலையில் 50 டிகிரி செல்சியஸ் (122 ஃபாரன்ஹீட்) வரை வெயில் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில்..

தில்லியில்..

தில்லியின் நிலை இப்படியிருக்க, ராஜஸ்தான் மாநிலம் சுருவில், செவ்வாயன்று 50.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருக்கிறது. நாட்டிலேயே மிக அதிக வெப்பம் பதிவான பகுதியாகவும் இது மாறிவிட்டது. இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 50.8 டிகிரி செல்சியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவானதில் முதலிடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததே அதிகபட்சமாக இன்றுவரை உள்ளது.

தில்லியில் கடுமையான வெப்பம் நிலவக் காரணம், கடுமையான வெப்பம் கொளுத்தும் ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்கள் அமைந்திருக்கும் மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதே என கூறப்படுகிறது. இதன் தாக்கத்தால்தான் தில்லியின் புறநகர்ப் பகுதிகளில் கடும் வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது என வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

லாரிக்கு அடியில்..

லாரிக்கு அடியில்..

கடந்த வாரத்தில் திங்கள்கிழமை(மே 20) தில்லியில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் பதிவாகியிருந்தது. உச்சபட்சமாக தில்லியின் நஜப்கர் பகுதியில் வெப்பநிலை 47.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.