தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரம்: பாஜக, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

News image

மம்தா பானா்ஜி

Updated On :28 மே 2024, 10:04 pm

கொல்கத்தா: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை மீறி திரிணமூல் காங்கிரஸýக்கு எதிராக விளம்பரம் வெளியிட்டதற்காக பாஜகவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் அக்கட்சி செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி தொண்டர்களுக்கு எதிராக ஊடகங்களில் பாஜக விளம்பரங்கள் வெளியிடுவதாகக் குற்றம்சாட்டி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் நாளிதழில் பாஜக வெளியிட்ட விளம்பரங்களையும் உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் சமர்ப்பித்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாஜகவின் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளது வெளிப்படையாகத் தெரிவதாக கூறியது. இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 அல்லது அடுத்த நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் விளம்பரங்களை எந்த வடிவிலான ஊடகத்திலும் பாஜக வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க பாஜக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி திரிணமூல் காங்கிரஸ் குறித்து "எக்ஸ்' தளத்தில் பாஜக அவதூறான விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பொய்யானது, அவதூறானது என்று தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்கக் கோரி பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் அந்த விளம்பரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.