தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

6-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்! மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பு!!

6-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்! மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பு!!

News image

வாக்குப்பதிவு

Updated On :25 மே 2024, 7:12 am

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 58 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் 11 மணி வரை சராசரியாக 25.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் மக்கள் காலை முதலே வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். இதனால் முற்பகல் 11 மணி நிலவரப்படி 36.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 மணி வரை பிகாரில் 23.67 சதவீதமும், ஹரியாணாவில் 22.09 சதவீதமும், ஜம்மு - காஷ்மீரில் 23.11 சதவீதமும் ஜார்க்கண்டில் 27.8 சதவீதமும் தில்லியில் 21.69 சதவீதமும் ஒடிசாவில் 21.3 சதவீதமும் உத்தரப்பிரதேசத்தில் 27.6 சதவீதமும் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 36.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகாரில் 8 மக்களவைத் தொகுதிகளிலும் 11 மணி வரை 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இங்கு 1.49 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இன்று பிகாரில் நடக்கும் பெரும்பாலான மக்களவைத் தொகுதிகள் கிராமப் பகுதிகளாக அமைந்துள்ளன.

தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 11 மணி வரை 27.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 14 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக பஸ்தி தொகுதியில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் ஏற்கெனவே 4 தொகுதிகளுக்கு தோ்தல் நிறைவடைந்துவிட்டது. இறுதியாக அனந்த்நாக்-ரஜெளரி தொகுதிக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 11 மணி வரை இங்கு 23.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வடமாநிலங்களில் கடும் வெயில் நிலவுகிறது. எனவே, வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க வாக்குச்சாவடிகளில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.