தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

Ravi Choudhary

Updated On :1 மே 2024, 6:15 am

புதுதில்லி: புதுதில்லி: தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) அமைந்துள்ள பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தீயணைப்புத் துறையின் இயக்குநர் அதுல் கார்க் உறுதி செய்துள்ளார்.

மேலும், அனைத்துப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சோதனை செய்தனர்.

Story image

-

இந்த சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தில்லி காவல் துணை கண்காணிப்பாளர், “அனைத்து பள்ளிகளையும் சோதனை செய்துவிட்டோம். வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி, மக்கள் பதற்றமடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மிரட்டல் வந்த ஒரு பள்ளியில் ஆய்வு நடத்திய தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Story image

மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அதிகாலை 4.15 மணியளவில் ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் குறித்து விரிவான விசாரணையை தில்லி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.